காதலில் விழுந்த பழனி... ராதிகா கர்ப்பத்தால் கோபிக்கு செக் : ஈஸ்வரி என்ன செய்ய போகிறார்?

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன?

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன?

author-image
WebDesk
New Update
Baakiyalakshmi

பாக்கியலட்சுமி

விஜய் டிவியின் பக்கியலட்சுமி சீரியலில் தாத்தா ஆகிவிட்ட கோபி இப்போது மீண்டும் அப்பா ஆக உள்ளதால், கலக்கத்தில் இருந்து வரும் நிலையில், ராதிகா தனது அம்மாவிடம் தான் கர்ப்பமாக இருப்பதை சொல்லிவிட்டார். ஆனால் கோபி இன்னும் ஈஸ்வரியிடம் சொல்லாத நிலையில், கோபியின் நடவடிக்கையை பார்த்து ஈஸ்வரிக்கு சந்தேகம் வந்துவிட்டது.

Advertisment

இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில் தனக்கு பழனிச்சாமி வாங்கி கொடுத்த புத்தகத்திற்காக பாக்யா பணம் கொடுக்க, அதை பழனிச்சாமி வாங்க மறுத்துவிடுகிறார். மேலும் அன்புக்கு விலை பேசாதீங்க என்று பாக்யா சொன்ன அதே டைலாக்கை பழனிச்சாமி சொல்ல, பாக்யா அமைதியாகி விடுகிறார். மறுப்பக்கம் ராதிகா கர்ப்பமாக இருப்பதை தெரிந்துகொண்ட கமலா ராதிகாவிடம் பேசிக்கொண்டிருக்கிறார்.

அப்போது அங்கு வரும் கோபியிடம், வாழ்த்துக்கள் மாப்ளே, இந்த குழந்தையை பெத்துக்கங்க என்று சொல்கிறார். இதற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கும் கோபியிடம், உங்க பிள்ளைங்க யாரும் உங்களுக்கு சப்போர்ட்டா இல்லை. பாக்யாவுக்கு தான் சப்போர்ட்டா இருக்காங்க. உங்களுக்குன்னு ஒரு குழந்தை இருந்தால் தான் உங்கள் பிரச்சனைக்கு ஓடி வந்து நிற்கும் என்று அட்வைஸ் செய்கிறார்.

அதன்பிறகு இந்த விஷயத்தை உங்கள் அம்மாவிடம் சொல்லிவிட்டீர்களா என்று கேட்க, இல்லை இனிமேல் தான் சீக்கிரம் சொல்லிவிடுகிறேன் என கோபி சொல்ல, எதாவது பிரச்சனை வந்தா சொல்லுங்க, நான் வந்து உங்கள் அம்மாவிடம் பேசுகிறேன் என்று கமலா சொல்கிறார். ராதிகாவும் கோபியும், கிளம்பி பாக்யா வீட்டுக்கு வர, கோபி ராதிகாவை கைதாங்கலா அழைத்து செல்வதை பார்த்த ஈஸ்வரி, நீ எதுக்குடா அவளை பிடிச்சிக்கிட்டு வர என்று கேட்கிறார்.

Advertisment
Advertisements

அவளுக்கு என்ன இன்னுமா உடம்பு சரியில்லை என்று கேட்க, இப்போது பரவாயில்லை என்று சொல்கிறார் ராதிகா. அதன்பிறகு வாமிட் நின்றுவிட்டதா என்று ஜெனி கேட்க, அது நிக்காது இனிமே திடீர் திடீர்னு வந்துகிட்டு தான் இருக்கும் என்று கோபி உளறிவிடுகிறார். இதை கேட்ட ஈஸ்வரி என்னடா உளர்ற என்று கேட்க, கோபி சமாளித்துவிடுகிறார். அதன்பிறகு கோபி ராதிகாவை அழைத்து செல்ல ஈஸ்வரி அவனை அழைத்து கேள்வி மேல் கேள்வி கேட்கிறாள்.

இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாத கோபி ஒருவழியாக சமாளித்துவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிடுகிறார். அதன்பிறகு, ஈஸ்வரி பாக்யாவிடம், ரெஸ்டாரண்டில் லாபம் இல்லை என்று சொன்னீயே இப்போது எப்படி இருக்கிறது என்று கேட்க, இப்போ கொஞ்சம் லாபம் இருக்கு என்று பாக்யா சொல்ல, அதற்கு ஜெனி வாழ்த்து தெரிவிக்கிறார். அதன்பிறகு ஈஸ்வரி பேசாதது குறித்து அமிர்தா எழிலிடம் சொல்லி வருத்தப்படுகிறார்.

எனக்கு சில ஆசைகள் இருக்கு அது நடந்து முடிந்தவுடன் குழந்தை பெற்றுக்கொள்ளலாம். இந்த வீட்டில் உன்கூட பேச பலர் இருக்கிறார்கள். போசதவர்களை பற்றி கவலைப்பட வேண்டாம் என்று அட்வைஸ் சொல்கிறான். இதனிடையே பாக்யா பார்க்க வேண்டும் என்பதற்காக விதவிதமாக ட்ரெஸ் போட்டு போட்டோ எடுத்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைக்கிறார் பழனிச்சாமி. இதை பார்த்த இனியா பாக்யாவிடம் காட்ட, அவரும் ஆச்சியப்படுகிறார் அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: