Advertisment

ராதிகா மீது வந்த சந்தேகம்... ரொமான்டிக் மோடில் பழனிச்சாமி : பாக்யா என்ன செய்ய போகிறார்?

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Baakiyalakshmi23042024

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் தாத்தா ஆகிவிட்ட கோபி, தற்போது மீண்டும் அப்பாவாக ஆக உள்ள நிலையில், இந்த விஷயத்தை எப்படி வீட்டில் சொல்வது என்று முழித்துக்கொண்டு இருக்கிறார். இதற்கிடையே பாக்யாவுக்கு ராதிகா மீது சந்தேகம் வந்துவிட்டதால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisment

இன்றைய எபிசோட்டில், பழனிச்சாமியின் போட்டோவை பார்த்த இனியா பூமர் அங்கிள் மாதிரி இருக்கு என்று சொல்ல, பாக்யா அப்படியெல்லாம் சொல்ல கூடாது அவர் நமக்கு எவ்வளவோ உதவி பண்ணிருக்காரு. நீ இப்பா சொன்ன அவர் மனசு கஷ்டப்படும் என்று சொல்ல, அப்போ நீயே நல்லா இருக்கு என்று சொல்லிவிடு என்று சொல்லிவிட, பாக்யாவும் உங்கள் ட்ரஸ் அழகா இருக்கிறது என்று வாய்ஸ் மெசேஜ் அனுப்புகிறார்.

பாக்யாவின் மெசேஜை பழனிச்சாமி திரும்ப திருப்ப கேட்டுக்கொண்டு, இதுவரை மேடம் என்று சேவ் பண்ணி வைத்திருந்த பாக்யாவின் நம்பரை தற்போது பாக்கியலட்சுமி என்று மாற்றி சேவ் செய்கிறார். அதன்பிறகு ராதிகா, எங்க அம்மா குழந்தை பெத்துக்க சொல்லிட்டாங்க நீங்க என்ன முடிவு எடுத்துருக்கீங்க என்று கோபியிடம் கேட்க, ஏற்கனவே நான் தாத்தா ஆகிட்டேன். இப்போ திரும்பவும் அப்பா ஆக போகிறேன். வெளியில் இதை கேட்டால் என்ன நினைப்பாங்க என்று கேட்கிறான்.

அதனை தொடர்ந்து இந்த குழந்தையை அபார்ஷன் பண்ணிடலாமா என்று கேட்க, ராதிகா தலையணையை வைத்து அவரை அடிக்கிறார். அதன்பிறகு இனிமேல் இப்படி கேட்கமாட்டேன் என்று கோபி சொல்லிவிட, பாக்யா கர்ப்பமாக ஆனபோது எப்படி ஃபீல் பண்ணீங்க என்று ராதிகா கேட்க, அவளை எனக்கு பிடிக்காது ஆனாலும், குழந்தை வரப்போகிறது என்ற சந்தோஷகத்தில் வானத்திற்கும் பூமிக்கும் குதித்தேன் என்று கோபி சொல்ல, பாக்யா கர்ப்பமான சந்தோஷ் நான் கர்ப்பமானா அபாஷனா என்று கேட்டு மீண்டும் அவனை அடிக்கிறாள்.

அதன்பிறகு இந்த விஷயத்தை வீட்ல எப்போ சொல்ல போறீங்க என்று கேட்க, டயர்டா இருக்கு சாப்பிட்டு தூங்கலாம் காலையில் எழுந்து பேசிக்கலாம் என்று சொல்ல, இருவரும் தூங்கிவிடுகின்றனர். கனவில், ராதிகா குழந்தையுடன் வீட்டுக்கு வர, செழியன் அவன் குழந்தையுடன் தாத்தா பாட்டியிடம் பேசிக்கொண்டிருக்கிறான். அப்போது போகி தனது குழந்தையை ஈஸ்வரி கையில் கொடுக்க, அவர் குழந்தைக்கு முத்தம் கொடுக்கிறாள். செழியனிடம் உன் தம்பி பாருடா என்று சொல்ல, பேரன் பேத்தி எடுத்த வயசுல உனக்கு குழந்தை கேட்குதா என்று ராமமூர்த்தி திட்டுகிறார்.

கோபி, குழந்தையிடம் அண்ணன் செழியனை பாரு என்று சொல்ல செழியன், பதிலுக்கு தனது குழந்தையிடம், உன் சித்தப்பா பாரு என்று சொல்ல, அதிர்ச்சியான கோபி என்னது சித்தப்பாவா, என்று கேட்க, செழியனுக்கு தம்பி என்றால் அவன் குழந்தைக்கு சித்தப்பா தானே என்று நக்கல் அடிக்கின்றனர். அதன்பிறகு எதோ சூடா இருக்கு என்று கோபி துணியை விலக்கி பார்க்க, குழந்தை அவன் முகத்தில் யூரின் போகிறது. அப்போது கோபி பதறியடித்துக்கொண்டு எழுந்திருக்கிறார்.

மறுநாள் காலையில கோபியை எழுப்பி ராதிகா என்ன முடிவு செய்திருக்கீங்க என்று கேட்க எனக்கு ஒருநாள் டைம் கொடு என்று கோபி கேட்கிறான். அதன்பிறகு காபி போட வரும் ராதிகா, பாக்யா கடுகு தாளிப்பதை பார்த்து வாந்தி எடுப்பது போல் செல்கிறார். இதை பார்த்த செல்வி இந்த அம்மா என்ன புள்ள தாச்சி பொண்ணு மாதிரி கடுகு தாளிப்புக்கு வந்தி எடுக்குது என்று சொல்ல, பாக்யாவும் இதை பற்றி யோசிக்கிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment