Advertisment

ஈஸ்வரியை எதிர்த்த பாக்யா... சிக்கலில் சிக்கிக்கொண்ட கோபி : பழனிச்சாமி காதலை சொல்வாரா?

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Baakiya Ewas

பாக்கியலட்சுமி சீரியல்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது ராதிகா கர்ப்பமாகிவிட்டதால், அதை கோபி எப்படி சமாளிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்

Advertisment

பாக்யா கடுகு தாளிப்பதை பார்த்த ராதிகாவுக்கு வாந்தி வர மாதிரி இருக்கிறார். இதை பார்த்த செல்வி இந்த அம்மா என்ன மாசமா இருக்காங்களா என்று கேட்க, அப்போது வாந்தி எடுக்கும் சத்தம் கேட்டு ஈஸ்வரி அங்கு வருகிறார். யார் வந்தி எடுத்தது, நீயா என்று அமிர்தாவிடம் கேட்க, அமிர்தா நான் இல்லை பாட்டி என்று சொல்லிவிடுகிறாள்.

ராதிகாதான் வாந்தி எடுத்தார் என்று சொல்ல, உனக்கு இன்னும் சரியாகலையா என்று கேட்க, ராதிகா எதையோ சொல்லி சமாளித்து அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிடுகிறாள். அதன்பிறகு செழியன் பாப்பாவை கொஞ்சிக்கொண்டிருக்க, அங்கு வரும் ஜெனி பாப்பாவுக்கு பெயர் வைக்க வேண்டும் என்று சொல்ல, செழியன் பெயரை சொல்கிறான். ஆனால் அதை பிடிக்கவில்லை என்று சொல்லும் ஜெனி, மாலினி என்ற வைக்கலாமா என்று செழியனுக்கு ஷாக் கொடுக்கிறாள்.

இதை கேட்க செழியன் அந்த பெயரை மட்டும் சொல்லாத என்று சொல்ல, அவளை போய் மீட் பண்ணும்போதெல்லாம் நல்ல இருந்ததா என்று கேட்கிறாள். இதை கேட்ட செழியன் அதிர்ச்சியில் தனது மகளிடம் புலம்பிக்கொண்டிருக்கிறான். அதன்பிறகு கீழே வரும் கோபியிடம், ராதிகாவுக்கு இன்னும் சரியாவில்லையா, நான் கசாயம் வைச்சி தருகிறேன் போய் கொடு என்று சொல்லிவிட்டு பாக்யாவிடம் சுடுதண்ணி வைக்க சொல்கிறாள் ஈஸ்வரி.

இதை கேட்ட பாக்யா எனக்கு வேலை இருக்கிறது என்று சொல்ல, நானே வைத்துக்கொள்கிறேன் என்று சொல்லி கிச்சனில் நுழைகிறாள். அங்கு சாமான் எங்கு இருக்கிறது என்று தெரியாமல் பாக்யாவிடம் கேட்க, கம்போர்டில் தான் எல்லாம் இருக்கிறது. இல்லை என்றால் உங்கள் பையனிடம் சொல்லி வாங்கி வர சொல்லுங்கள் என்று சொல்கிறாள். அதன்பிறகு ஒருவழியாகன கசாயம் வைத்துவி்ட்ட ஈஸ்வரி ராதிகாவை வர சொல்கிறாள்.

ராதிகா கீழே வந்ததும், ஈஸ்வரி கசாயம் கொடுக்க, அவள் தயங்கியபடி வாங்கிக்கொள்கிறாள். அப்போது கோபி அதெல்லாம் வேண்டாம்மா. டாக்டர் கொடுத்த மாத்திரை சாப்பிடும்போது கசாயம் குடிக்க கூடாது எனறு சொல்லி சமாளித்துவிட்டு ராதிகாவை மாடிக்கு அழைத்து செல்கிறான். அதன்பிறகு எல்லோரும் குழந்தையை கொஞ்சிக்கொண்டு இருக்க, ஜெனி மீண்டும் பெயர் வைக்கும் பிரச்சனையை கிளப்ப, மாலினி என்று சொல்லவந்து மானசி என்று சொல்ல, செழியன் நிம்மதி பெருமூச்சி விடுகிறான்.

அதன்பிறகு குழந்தைக்கு பெயர் வைக்கும் பொறுப்பு ஈஸ்வரிக்கு செல்கிறார். இதனையடுத்து பழனிச்சாமி வீட்டுக்கு திடீர் என்ட்ரி கொடுக்கும் பாக்யா, பழனி மற்றும் அவரது அக்காவிடம் நலம் விசாரிக்கிறாள். என்ன ஒன்றும் சொல்லாம வந்துட்டீங்க என்று பழனி கேட்க, ஏன் சார் சொல்லிட்டு தான் வரணுமா என்று பாக்யா கேட்க, இது உங்க வீடு மாதிரி எப்போவேனாலும் வரலாம் போகலம் என்று பழனி சொல்ல அத்துடன் எபிசோடு முடிகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment