கோபியை நோஸ்கட் செய்த இனியா... ஈஸ்வரி கொடுத்த ரியாக்ஷன் : ராதிகா கர்ப்பம் எப்போதான் தெரியும்?

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்

author-image
WebDesk
New Update
baakiyalakshmi ser

பாக்கியலட்சுமி சீரியல்

தாத்தா ஆகிவிட்ட கோபி அடுத்து அப்பா ஆக போகும் விஷயத்தை எப்படி சொல்வது என்று யோசித்துக்கொண்டிருக்கும் கோபியின் ரியாக்ஷன் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

Advertisment

மாலினி சம்பவத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஜெனி, இப்போது செழியன் என்ன செய்தாலும் அதை பற்றி கேட்டுக்கொண்டே இருப்பதால் செழியனுக்கு கடுப்பாகிறது. இதனிடையே ஆபீஸில் அனைவரும் பாண்டிச்சேரி கிளம்ப, ஜெனிக்கு போன் செய்து செழியன் விஷயத்தை சொல்கிறான். இதை கேட்டு அதிர்ச்சியான ஜெனி நீ பாண்டிச்சேரி போகவே கூடாது என்று சொல்கிறாள்.

இதை கேட்டு அதிர்ச்சியான போகி ஏன் ஜெனி இப்படி சொல்ற என்று கேட்க, நீ அங்க போய் என்ன பன்ற யார்ட பேசிட்டு இருக்கனு நான் யோசித்துக்கொண்டே இருக்கனும் எனக்கு ரொம்ப டிஸ்டர்ப் ஆகும் அதனால் நீ போக கூடாது என்று ஸ்ரிக்கடாக சொல்லிவிடுகிறாள். இதனால் கோபி ரொம்பவே அப்சட் ஆகிவிடுகிறாள். மறுப்பக்கம், ஹாலுக்கு வரும் கோபி இன்று, ராதிகா கர்ப்பம் குறித்து அம்மாவிடம் சொல்லிவிட வேண்டும் என்று முடிவு செய்கிறான்.

அம்மாவிடம் தனியாக விஷயத்தை சொல்வதற்காக, கோபி ஈஸ்வரியை காரில் அழைத்துச்செல்ல, அதை பார்த்து ராமமூர்த்தி இனியா  இருவரும் கேள்வி கேட்கின்றனர். அப்போது ஈஸ்வரிக்கு போன் வருகிறது. ஜெனி பாப்பா குழந்தைக்கு பேர் வைக்கும் பங்ஷனுக்கு அழைப்பு விடுக்கிறாள். இதை கேட்ட கோபி, செழியன் குழந்தைக்கு பங்ஷனா எப்போமா என்கிட்ட சொல்லவே இல்லை என்று கேட்க, நாளைக்கு தான் பங்ஷன் என்று ஈஸ்வரி சொல்கிறாள். இதனால் ஷாக் ஆகும் கோபி, ராதிகா விஷயத்தை அப்படியே மூடி மறைக்க முடிவு செய்கிறான்.

Advertisment
Advertisements

அதன்பிறகு இனியாவை அழைத்துக்கொண்டு வெளியில் செல்லும் கோபி, ராதிகா கர்ப்பம் குறித்து அவள் என்ன நினைக்கிறாள் என்று தெரிந்துகொள்ள, உனக்கு இப்போ தம்பியோ தங்கச்சியோ இருந்தா எப்படி இருக்கும் என்று கேட்க, அது இப்போ எப்படி பாசிபிள் ஆகும் டாடி என்று இனியா கேட்கிறாள். மேலும் மயூவை இங்கே வரவழைக்க கேட்கிறீங்களா, அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் டாடி ராதிகா இருக்கிறதே எனக்கு பிடிக்கல என்று சொல்ல, உடனே கோபி, காலேஜ்ஜில் படிக்கிற யாருக்கும் தம்பி தங்கச்சி இல்லையா என்று கேட்க, ஒரு பையனுக்கு மட்டும் 10 வயசு வித்தியாசத்தில் தம்பி இருக்கான் அதுக்கே கிண்டல் பண்ணுவாங்க என்று சொல்கிறாள் இனியா.

இதை கேட்ட கோபி, பையன்களிடம் பாத்து ஜாக்கிரதையாக நடந்துக்கோம்மா என்று சொல்ல, அவங்க எல்லாம் உங்களை மாதிரி மோசமானவங்க இல்லை டாடி என்று இனியா சொல்ல, கோபி ஷாக் ஆகிறான். நீங்க ராதிகாவை கல்யாணம் பண்ணிக்கிட்டது மட்டும் இல்லாம அவங்கள வீட்டுக்கு அழைத்து வந்து அம்மா முன்னாடியே ஒரே வீட்ல இருக்கீங்க. அம்மா கஷ்டப்படுவாங்கனு கூட யோசிக்காம நீங்க மட்டும் சந்தோஷமா இருக்கீங்க. இதல நல்ல டாடினு வேற சொல்லிக்கிறீங்க என்று சொல்கிறாள்.

இதை கேட்ட ஷாக் ஆகும் கோபி, ராதிகா விஷயத்தை இனியாவிடம் சொல்லவே முடியாது என்று முடிவெடுக்கிறான். அடுத்து ராதிகா கிச்சனில் ஜூஸ் போட வரும்போது கரண்ட் கட் ஆகிவிட, ஜெனிக்கு போட்ட ஜூஸை பாக்யா ராதிகாவிடம் கொடுக்கிறாள். ராதிகாவும் ஜூஸை வாங்கிக்கொண்டு மாடிக்கு சென்றுவிட, அக்கா நல்லவளா இரு ஆனா ரொம்ப நல்லவளா இருக்காத என்று சொல்வி அட்வைஸ் பண்ண அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Baakiyalakshmi Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: