/indian-express-tamil/media/media_files/S7yVmIClUcF6tkvP8EO8.jpg)
பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த சீரியலின் தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் தற்போது ராதிகா கர்ப்பமானதை தனது வீட்டில் எப்படி சொல்வது என்று தெரியாமல் கோபி அல்லாடுவதும், அவன் மீது ராதிகா கோபப்படுவதும் ரசனையின் உச்சமாக இருந்து வருகிறது.
3 பிள்ளைகளுக்கு அப்பாவான கோபி பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு, ராதிகாவை திருமணம் செய்துகொண்டார். ராதிகாவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில், கோபியின் மகன் செழியனுக்கு குழந்தை பிறந்து கோபி தாத்தா ஆகிவிட்டார். இந்த நிலையில், தற்போது ராதிகா கர்ப்பமாக இருக்கிறார். இது ராதிகாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், கோபிக்கு சங்கடமாக இருக்கிறது.
ராதிகாவின் வற்புறுத்தல் காரணமாக இந்த குழந்தையை பெற்றுக்கொள்ள நினைக்கும் கோபி, தனது வீட்டில் சொல்ல போராடி வருகிறார். இந்த கர்ப்பம் குறித்து பாக்யா தெரிந்துகொண்டுள்ளார். இதனிடையே இந்த வர எபிசோடுகளுக்கான ப்ரமோவில், கோபி, ராதிகா கர்ப்பமாக இருப்பது குறித்து கோபி உண்மையை ஈஸ்வரியிடம் சொல்ல ஈஸ்வரி ஷாக் ஆகிறார். உடனடியாக வீட்டுக்கு வந்து, ராதிகாவிடம் இந்த குழந்தை வேண்டாம் என்று சொல்கிறார்.
இதை கேட்டு அதிர்ச்சியாகும் ராதிகா இந்த குழந்தை வேண்டுமா? வேண்டாமா என்பது குறித்து நான் தான் முடிவு செய்வேன் என்று சொல்ல, ஈஸ்வரி கோபத்தின் உச்சத்திற்கு செல்கிறார்.ஆனாலும் நான் என்ன சொல்ல வறேன்னா என்று ஈஸ்வரி எதோ சொல்ல வர, ராதிகா பேசாம போய்டுங்க என்று சொல்ல, ஈஸ்வரி கோபத்துடன் சென்றுவிடுகிறார். பின்னாடியே கோபியும் சேர்ந்து சென்றுவிட அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது.
இந்த ப்ரமோ தற்போது வைரலாகி வரும் நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.