Advertisment

உண்மை சொன்ன கோபி... அதிர்ச்சியில் ஈஸ்வரி எடுத்த முடிவு : ராதிகா காட்டிய கோபம்

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்

author-image
WebDesk
New Update
baakiya11

பாக்கியலட்சுமி சீரியல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

விஜய் டிவியின் பாக்கிலட்சுமி சீரியலில், ராதிகாவின் கர்ப்பம் குறித்து எப்போது தெரியவரும் என்ற எதிர்பார்ப்பு எகிறி வரும் நிலையில், இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

Advertisment

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில்இந்த சீரியலின் தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் தற்போது ராதிகா கர்ப்பமானதை தனது வீட்டில் எப்படி சொல்வது என்று தெரியாமல் கோபி அல்லாடுவதும்அவன் மீது ராதிகா கோபப்படுவதும் ரசனையின் உச்சமாக இருந்து வருகிறது.

3 பிள்ளைகளுக்கு அப்பாவான கோபி பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டுராதிகாவை திருமணம் செய்துகொண்டார். ராதிகாவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில்கோபியின் மகன் செழியனுக்கு குழந்தை பிறந்து கோபி தாத்தா ஆகிவிட்டார். இந்த நிலையில்தற்போது ராதிகா கர்ப்பமாக இருக்கிறார். இது ராதிகாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும்கோபிக்கு சங்கடமாக இருக்கிறது.

ராதிகாவின் வற்புறுத்தல் காரணமாக இந்த குழந்தையை பெற்றுக்கொள்ள நினைக்கும் கோபிதனது வீட்டில் சொல்ல போராடி வருகிறார். இதனிடையே இன்றைய எபிசோட்டில், செழியன் குழந்தைக்கு யாழினி என்று ஈஸ்வரி பெயர் வைத்த நிலையில், இன்று அவரை தனியாக அழைத்துச்செல்லும் கோபி, ஒருவழியாக ராதிகா கர்ப்பமாக இருக்கிறாள் என்று சொல்லிவிடுகிறான்.

இதை கேட்ட ஈஸ்வரி அதிர்ச்சியடைந்த நிலையில், இந்த விஷயம் மகன்களுக்கு தெரிந்தால் வெறுத்தவிடுவார்கள். இனியாவுக்கு தெரிந்தால், அவளது திருமணமே பாதிக்கும் என்று ஈஸ்வரி சொல்கிறாள். மேலும் அந்த காலத்தில் அம்மாவும் மகளும் ஒரே நேரத்தில் கர்ப்பமாக இருப்பார்கள். இது சகஜம் தான். ஆனால் இந்த காலத்தில், காலத்தில் கோபி தாத்தா ஆகிவிட்டதால் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

ஏற்கனவே கோபியின் 2-வது திருமணமே தங்களது குடும்பத்தை வெகுவாக பாதித்துள்ளதாக நினைத்து பார்க்கும் ஈஸ்வரி, கோபியின் மகன்களுக்கு அடுத்ததடுத்து திருமணம் நடைபெற்ற நிலையில், விரைவில் இனியாவுக்கும் திருமணம் நடைபெறும். அப்போது கோபியின் இந்த விஷயம் தெரிந்தால் இனியாவின் திருமணம் பாதிக்கும் என்று நினைக்கிறார். இதனால் இந்த குழந்தை வேண்டாம் என்று நான் ராதிகாவிடம் பேசுகிறேன். நான் சொன்னால் கேட்பாள் என்று ஈஸ்வரி சொல்கிறாள்.

இதை கேட்ட கோபி, தான் ஏற்கனவே பேசிவிட்டதாகவும், இந்த உறவுக்கு அடையாளமாக இந்த குழந்தை இருக்கட்டும் என்று அவள் சொல்வதாக சொல்லும் கோபி ராதிகாவின் அம்மாவும் இதையேதான் கூறுவதாக சொல்கிறான். இதை கேட்டு அதிர்ச்சியாகும் ஈஸ்வரி அம்மாவுக்கு பொண்ணுக்கும் பைத்தியம் தான் பிடித்திருக்கிறது என்று கோபப்பட, கோபி ஈஸ்வரி இருவரும் வீட்டுக்கு வருகின்றனர். வீட்டுக்கு வந்த ஈஸ்வரி பதட்டத்துடன் அமர்ந்திருக்கிறாள்.

ஈஸ்வரியை பார்த்த பாக்யா என்னாச்சு என்று கேட்க, உடனடியாக மாடிக்கு சென்று, ராதிகாவிடம் பேசுகிறாள். இந்த குழந்தை வேண்டாம் என்று ஈஸ்வரி சொல்ல, குழந்தை வேண்டுமா வேண்டாமா என்று முடிவு செய்வது நானும் கோபியும்தான் என்று சொல்ல அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment