ஈஸ்வரிக்கு நோஸ்கட் கொடுத்த பாக்யா : தெரியாமல் செய்தாரா கோபி? ராதிகா கடும் கோபம்

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசொட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசொட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்

author-image
WebDesk
New Update
baakiyalakshmi ser

பாக்கியலட்சுமி சீரியல்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் தாத்தா ஆகிவிட்ட கோபி இப்போது மீண்டும் அப்பா ஆக உள்ள நிலையில், இதை எப்படி வீட்டில் சொல்வது என்று யோசிக்கிறார். அதே சமயம் இந்த விஷயத்தை சொல்லிவிட்டு அடுத்து நம்ம வீட்டுக்கு போகலாம் என்று ராதிகா வற்புறுத்தி வருகிறார். இதனால் கோபி என்ன செய்ய போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இன்றைய எபிசோட்டில், ராதிகா வற்புறுத்த, இன்று உண்மையை சொல்லிவிடுவதாக கோபி சொல்லிவிட்டு செல்கிறான். வாக்கிங் போய்விட்டு வரும் கோபி குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக இருப்பதை பார்த்து சொல்லிவிடலாம் என்று முடிவு செய்கிறான். கோபி சொல்ல வருவதை தெரிந்துகொண்ட ஈஸ்வரி வேண்டாம் என்று கண்ணை காட்ட, கோபி என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறான்.

அதன்பிறகு கர்ப்பம் குறித்து ஏன் சொல்லவில்லை என்று கோபியிடம் ராதிகா கேட்க, அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவர்கள் மகிழ்ச்சியை கெடுக்க நான் விரும்பவில்லை என்று கோபி சொல்கிறான். இதை கேட்ட ராதிகா என் கர்ப்பம் உங்கள் வீட்டு மகிழ்ச்சியை எப்படி பாதிக்கும் என்று கேட்க, மகன்களின் சந்தோஷம் பாதிக்கும் என்று யோசனையா என்று கோபியை திட்டி தீர்க்கிறாள்.

மகன்களை பற்றி கவலைப்படும் நீங்கள் என்னை பற்றியும் என் கர்ப்பத்தை பற்றியும் எந்த கவலையும் இல்லாமல் இருக்கிறார் என்று சொல்கிறாள். மேலும் இதுதான் என் கவலை என்றும், இனியாவிற்காக இந்த வீட்டுக்கு வந்துவிடு என்று உங்க அம்மா சொன்னால், உடனே என்னை விட்டுவிட்டு வந்துவிடுவீர்கள். அதனால் தான் இந்த குழந்தையை பெற்றுக்கொள்ள விரும்புகிறேன் என்று ராதிகா சொல்கிறாள்.

Advertisment
Advertisements

இதன்பிறகு காலையில் எழுந்திருக்கும் ஈஸ்வரி, பாக்யா உன் மனநிலையை புரிந்து வைத்திருக்கிறேன். ராதிகா கர்ப்பம் உன்னை எந்த அளவிற்கு பதிக்கும் என்று யோசிக்கிறேன். ஆனால் கோபி இதை தெரியாமல் செய்துவிட்டு இப்போது ராதிகாவிடம் மாட்டிக்கொண்டு முழிக்கிறான் என்று சொல்ல, இதை கேட்ட பாக்யா, எனக்கு என்னுடைய வேலையே அதிகமாக இருக்கிறது. இந்த விவகாரம் எனக்கு தேவையில்லாதது என்று நோஸ்கட் செய்கிறாள்.

அதன்பிறகு செல்வி ஈஸ்வரி பற்றி குறை சொல்ல, பாக்ய அவளை திட்டி வேலையை பாரு என்று சொல்கிறாள். அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: