கோபியை துரத்த தயாராகும் மகன்கள் : ஈஸ்வரி என்ன சொல்ல போகிறார் ; அடுத்து என்ன?

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Wzhil And Gop

பாக்கியலட்சுமி

ராதிகாவின் கர்ப்பம் குறித்து பாக்யா வீட்டில் உண்மையை சொல்ல, எழில், செழியன், இனியா என மூவருமே கோபியை ஒரு மாதிரியாக பார்க்க கோபி தலைகுணிந்து நிற்கிறான். இதனால் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisment

தமிழ் சின்னத்திரையில் முக்கிய சீரியல்களில் ஒன்றாக பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், பாக்யாவை திட்டும் கோபி, உன்னை யாராவது இதை சொல்ல சொன்னாங்களா என்று கேட்க, நீங்க சொல்ல முடியாம தவிச்சிட்டு இருந்தீங்க, அதனால நான் சொன்னேன். என் பிள்ளைகள் எவ்வளவு நேரம் காத்திருப்பார்கள். அவர்களுக்கு வேலை இருக்கிறது என்று சொல்கிறாள்.

இந்த விஷயத்தை கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைய, ஈஸ்வரி தலையில் கைவைத்துக்கொண்டு சோபாவில் அமர்கிறாள். இதனால் கோபமான ராமமூர்த்தி, இந்த உண்மையை தெரிந்துகொண்டு தான் இத்தனை நாளா சொல்லாம மறைச்சியா என்று ஈஸ்வரியிடம் கேட்டுவிட்டு, கோபியை திட்டிவிட்டு சென்றுவிடுகிறான். அதேபோல் அமிர்தா, ஜெனி இருவருமே அவர்கள் ரூமுக்கு சென்றுவிடுகின்றனர்.

எழல், செழியன் இனியா ஆகியோரை பார்க்க முடியாமல' தலை குணிந்து நிற்கும் கோபி, இனியாவிடம் பேச போக, இதுக்குதான் காலேஜ்ல படிக்கிறவங்களுக்கு தம்பி தங்கச்சி இருக்காங்களா என்று கேட்டீங்களா என்று கேட்டுவிட்டு சென்றுவிடுகிறாள். அடுத்து செழியனிடம் போக, இதுக்குதான் உங்க சீனியருக்கு குழந்தை பிறந்திருப்பதாக சொன்னீங்களா என்று கேட்டுவிட்டு சென்றுவிட, எழில் எதுவும் பேசாமல் கோபமாக சென்றுவிடுகிறான்.

Advertisment
Advertisements

இதையெல்லாம் பார்த்துவிட்டு, ராதிகா அவளது ரூமுக்கு சென்றுவிட, ஈஸ்வரி கோபியை திட்டுகிறாள். உன் பிள்ளைங்க முகத்தை பார்த்தியா, நான் சொன்னதை கேட்டிருந்தா இப்படி நடந்திருக்குமா? அது சரி நான் சொன்னதை எப்போ நீ கேட்ருக்க, என்று திட்டிவிட்டு ரூமுக்கு சென்றுவிட, ஜெனி ரூமில் யோசித்துக்கொண்டிருக்க, அங்கு வரும் செழியனிடம், உடனடியாக மாலினி கர்ப்பமா இருக்காங்களா என்று கேட்கிறாள்.

இதை கேட்டு அதிர்ச்சியாகும் செழியன், அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை என்று சொல்கிறான். எனக்கு பயமாக இருக்கிறது என்று ஜெனி சொல்ல, சத்யமா அப்படி நடக்க வாய்ப்பு இல்லை என்று செழியன் செல்கிறான். அடுத்து இனியா ரூமில் அழுதுகொண்டிருக்க, அவளுக்கு சமாதானம் சொல்லி, பாக்யா தூங்க வைக்கிறாள். எழில் மொட்டை மாடியில் யோசித்துக்கொண்டிருக்க, அங்கு மதுபாட்டிலுடன் வருகிறான் செழியன்.

ஜெனி சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்த செழியன் நல்லா இருந்த என் வாழ்க்கை நாசமாகிவிட்டது என்று சொல்லி எழிலிடம் சொல்லி புலம்புகிறான். அதன்பிறகு, இருவரும் கோபி பற்றி பேச, அந்த ஆளா நாளைக்கு விட்டை விட்டு வெளியே போக சொல்ல போகிறேன் என்று எழில் சொல்கிறான். இது அம்மா வீடு. அந்த ஆள் இங்கு இருப்பது மட்டும் இல்லாமல், இப்போ குழந்தை வேற வரப்போகுது, அம்மாவுக்கு கஷ்டமாக இருக்கும்.

அவர் இனிமேல் இந்த வீட்டில் இருக்க கூடாது என்று சொல்ல, நீ சொல்றது சரிதான் என்று செழியனும் சொல்கிறான். அம்மாவுக்கு ஒன்னுனா நாமதான் அவங்க கூட நிக்கனும் என்று சொல்ல, அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: