Advertisment

கோபியை விரட்ட தயாரான எழில் : கூட்டு சேர்ந்த செழியன் ; ராதிகாவும் இப்படி சொல்லிட்டாரே!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Gopi Radhika

பாக்கியலட்சுமி சீரியல்

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவின் கர்ப்பம் குறித்து அனைவருக்கும் தெரிந்துவிட்ட நிலையில், தற்போது கோபியை அந்த வீட்டை விட்டு விராட்டிவிட எழில் செழியன் இருவரும் ப்ளான் போடுகின்றனர். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisment

இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், தான் அப்பா ஆக போற விஷயத்தை கேட்டு தனது பிள்ளைகள் கொடுத்த ரியாக்ஷனை நினைத்து பார்க்கும் கோபியிடம், என்னாச்சு என்ன பிரச்சனை என்று ராதிகா கேட்கிறாள். அப்போது என் பிள்ளைங்க கொடுத்த ரியாக்ஷனை நினைத்து பார்க்கிறேன். இனிமேல் அவர்கள் முகத்தில் நான் எப்படி முழிப்பேன் என்று கேட்கிறார்.

இதை கேட்ட ராதிகா, அதெல்லாம் இப்போ மட்டும் தான். போக போக அவங்களும் புரிஞ்சுக்குவாங்க. உங்க அம்மா இந்த குழந்தை வேண்டாம் என்று சொன்னாங்க, ஆன உங்க பிள்ளைங்க அப்படி சொல்லலையே என்று ராதிகா சொல்ல, நீ உன்னை பற்றியும், உன் பக்கத்தை பற்றியும்தான் யோசிக்கிற, என்னை பற்றி யோசிக்கவே மாட்டேன்குற என்று சொல்கிறார் கோபி.

மேலும் நாம் வெளிநாட்டில் இல்லை. இந்தியாவில் இருக்கிறோம். இங்க கலாச்சாரம் வேற, என் பிள்ளைங்களுக்கு குழந்தை இருக்கும்போது நான் அப்பா ஆக போகிறேன் என்றால், எல்லோரும் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள். என்று புலம்பிக்கொண்டிருக்கிறார். மறுபக்கம், பாக்யா பழையதை நினைத்து ஃபீல் பண்ணிக்கொண்டிருக்க, எழில் வருவதை பார்த்து தூங்குவது போல் நடிக்கிறாள்.

அப்போது எழில் அங்கு வந்து பாக்யா தலையை கோதிவிட்டு, சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டு செல்கிறான். அதன்பிறகு செழியனும் வந்து அதே மாதிரி செய்துவிட்டு, போக, இனியா தூக்கத்தில் அம்மா அம்மா என்று உளறுகிறாள். அவளுக்கு பாக்யா ஆறுதல் சொல்லி தூங்க வைக்கிறாள். அடுத்த நாள் காலை எழில் ஜாக்கிங் போகும்போது, கோபியிடம் நீங்கள் இந்த வீட்டை விட்டு போய்விடுங்கள். நாங்கள் எங்க வாழ்க்கையை வாழ்கிறோம்.

உங்க பிரச்சனையை தூக்கிக்கொண்டு எங்களால் சுற்ற முடியாது என்று சொல்ல, நான் என் அம்மாவுக்காக இருக்கிறேன். இது நான் காட்டியவீடு என்று கோபி சொல்ல, இது என் அம்மா வீடு, நீங்கள் போக முடியாதுனு சொன்ன உங்களை போக வைப்பேன் என்று சவால் விடுகிறான் எழில். இதை கேட்டு ஷாக் ஆகும் போகி, ராதிகாவிடம் வந்து சொல்ல, அவன் சொல்வது சரிதான் என்று சொல்கிறாள் ராதிகா.

இது என் வீடு என்று கோபி சொல்ல, இல்லை இது பாக்யா வீடு, அவங்க போக சொன்ன நாம போய்த்தான் ஆகனும் என்று சொல்ல, எங்க அம்மா சொல்லாம நான் இந்த வீட்டை விட்டு வரமாட்டேன் என்று கோபி சொல்ல, உங்க அம்மாவும் வீட்டை விட்டு போக சொல்வாங்க என்று ராதிகா சொல்கிறாள். அதன்பிறகு எழில் வீட்டுக்கு வர செழியன் ஜாக்கிங் போகிறான். அவனிடம் கோபியிடம் பேசியதை சொல்லி, நீ போயிட்டு சீக்கிரம் வா என்று சொல்லி அனுப்புகிறான் அத்துடன் எபிசோடு முடிகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment