Advertisment

கோபியை கைவிட்ட ஈஸ்வரி : ராதிகா கொடுத்த நோஸ்கட் : வீட்டை விட்டு வெளியேறும் கோபி - ராதிகா!

விஜய் டிவயின் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Baakiyalakshmi

பாக்கியலட்சுமி சீரியல்

ராதிகாவின் கர்ப்பம் பற்றி தெரிந்த எழில், செழியன் இருவரும் கோபி மற்றும் ராதிகாவை வீட்டில் இருந்து வெளியேற்ற முயற்சித்து வரும் நிலையில், பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

Advertisment

இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், ஜெனி, அமிர்தா, ஈஸ்வரி ஆகியோர் கிச்சனில் நின்று பேசிக்கொண்டிருக்கும்போது, ராமமூர்த்தி பாக்யா இருவரும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு வரும் கோபி, என்னை இந்த வீட்டை விட்டு போக சொல்றாங்க, உங்க சந்தோஷத்திற்காகத்தான் நான் இங்கு வந்தேன் அவன் எப்படி என்னை வீட்டை விட்டு வெளியே போக சொல்லலாம் என்று ஈஸ்வரியிடம் சொல்கிறான்.

இதை கேட்ட, ராமமூர்த்தி தலையும் இல்லாம வாலும் இல்லாம இப்ப மோட்டையா சொன்ன எப்படி, யார் உன்னை வீட்டை விட்டு போக சொன்னா என்று கேட்க, அந்த நேரத்தில் எழிலும் செழியனும் மாடியில் இருந்து கீழே வருகின்றனர். அப்போது நான் தான் சொன்னேன் என்று எழில் சொல்ல, சரியாதான் சொல்லிருக்கான் இதுல என்ன இருக்கு என்று ராமமூர்த்தி சொல்ல, நீங்க சொல்லித்தானே இங்கு வந்தேன். அவன் எப்படி போக சொல்லலாம் என்று கோபி ஈஸ்வரியிடம் கேட்கிறான்.

இதை கேட்டு ஈஸ்வரி அமைதியாக இருக்க, எழில், மீண்டும் நீங்க இந்த வீட்டை விட்டு கிளம்புங்க என்று சொல்கிறான். இதை கேட்டு டென்ஷன் ஆன கோபி, என்னை இந்த வீட்டை விட்டு வெளியே போக சொல்ல நீ யாரு, இது என்னோட வீடு, நான் கட்டிய வீடு என்று சொல்ல, பாக்யா கிச்சனில் இருந்து வெளியே வந்து, இது எங்க வீடு, எங்க எல்லோரிடமும் இருந்த கடைசி பணம் வரைக்கும் போட்டு வாங்குன வீடு. பணத்தை வாங்கிக்கொண்டு இந்த வீட்டை என் பெயருக்கு மாற்றியது ஞாபகம் இல்லையா என்று கேட்கிறாள்.

இதை கேட்ட கோபி, நீங்க சொன்ன நான் போயிடனுமா, எங்க அம்மா சொல்லித்தான் இங்கு வந்தேன். என் பையன் செழியன் அமைதியாக இருக்கிறான் என்று சொல்ல, நான் அமைதியாக இருந்தால் உங்களுக்கு சப்போர்ட் பண்றேனு அர்த்தம் இல்லை. அவன் பேசுவது சரியாக இருக்கிறது அதனால் தான் அமைதியாக இருக்கிறேன் என்று சொல்ல, இதை கேட்டு அதிர்ச்சியான கோபி, அடுத்து இனியாவிடம் போக, நீங்க இங்கு இருப்பது எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லிவிடுகிறாள்.

மேலும் உங்களை பார்த்தாலே எரிச்சலாக வருகிறது என்று சொலலிவிட்டு பாக்யாவின் பின் சென்று ஒளிந்துகொள்ள, இதை கேட்டு, ஈஸ்வரியும் உன் பிள்ளைங்க எதாவது பண்றதுக்குள்ள இங்கிருந்து போய்டு என்று சொல்ல, கோபி மேலும் அதிர்ச்சியாகிறான். அதன்பிறகு மாடிக்கு செல்லும் ராதிகா துணிகளை எடுத்து வைக்க, அங்கே வரும் கோபியிடம் நான் சொன்னப்போவே கிளம்பியிருந்தா அந்த அவமானம் தேவையா என்று கேட்கிறாள். இதை கேட்ட கோபி என் பொண்ணு இனியா கூடா என்னை இப்போ வேண்டாம் என்று சொல்கிறாள் என ஃபீல் பண்ணுகிறான்.

இதை கேட்ட ராதிகா, உங்களை பற்றி யோசிக்காதவங்களை பத்தி நீங்க எதற்காக யோசிக்கனும், இனிமேல் என்னால் இந்த வீட்டில் இருக்க முடியாது. நீங்க வேனா இங்கேயே இருந்து அவமானபடுங்க என்று சொல்கிறாள். கடைசியாக ஒருமுறை அம்மாகிட்ட பேசுகிறேன் என்று சொல்ல, இது பாக்யா வீடு, அவங்க வெளியே போய்டுனு சொல்லிட்டாங்க, இதுக்கப்புறம் உங்க அம்மாக்கிட்ட உங்கள விட்டு இருக்க முடியாது என்று அவங்க காலில் விழுந்து கெஞ்ச போறீங்களா என்று ராதிகா கேட்கிறாள்.

அதன்பிறகு ராதிகாவும் கோபியும் கீழே இறங்கி வரை, வீட்டில் அனைவரும் பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது பாக்யா, மாமா நான் அவருக்காக எவ்வளவோ சகிச்சிக்கிட்டு போயாச்சி இனிமேல் என்னால் அப்படி இருக்க முடியாது என்று ராமமூர்த்தியிடம் சொல்ல, இது உன் வீடுமா இங்க யாரு இருக்கனும் இருக்க கூடாது என்று நீதான் முடிவு பண்ணணும். எனக்கும் கோபிக்கும் ஒன்னும் இல்லை என்று ஆனதற்கு பிறகு அவனது அப்பா அம்மா எங்களையும் நீ வெளியே போக சொன்னால் நாங்கள் போய்த்தான் ஆக வேண்டும் என்று சொல்ல, பாக்யா அதிர்ச்சியடைகிறாள். அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment