கோபி பக்கம் சாய்ந்த ஈஸ்வரி : பாக்யாவுக்கு ஷாக் கொடுத்த ராமமூர்த்தி ; ராதிகா ரியாக்ஷன் என்ன?

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Baakiya and gopi

பாக்கியலட்சுமி சீரியலில், ராதிகாவின் கர்ப்பம் பற்றி தெரிந்த பாக்யாவின் குடும்பம் கோபியை வீட்டை விட்டு காலி செய்ய சொல்ல, அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்றைய எபிசோட்டில் என்ன நடந்துது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்

Advertisment

இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், ராமமூர்த்தி பாக்யாவிடம், இது உன் வீடுமா நாளைக்கே கோபியின் அப்பா அம்மா என்ற பெயரில் நீ எங்களை வெளியில் போக சொன்னாலும் நாங்கள் போய்த்தான் ஆக வேண்டும் என்று சொல்ல, பாக்யா அதிர்ச்சியாகி ஏன் மாமா இப்படியெல்லாம் பேசுறீங்க என்று கேட்க, எழிலும் நீங்கள் தாத்தா பாட்டி அப்படி பேசக்கூடாது என்று சொல்கிறான்.

அடுத்து ஈஸ்வரி ரூமில் தனியாக இருக்க, அங்கு வரும் கோபி, என்னை எல்லோரும் அசிங்கப்படுத்துரங்க அதுகூடா பரவாயில்லை. ஆனால் நீங்கள் எனக்கு சப்போர்ட்டாக இல்லாதது தான் எனக்கு கஷ்டமாக இருக்கிறது என்று சொல்லும் கோபி, நீங்களும் என்னுடன் வந்துவிடுங்க அம்மா என்று சொல்ல, ஈஸ்வரி அதிர்ச்சியாகிறார் ஆனாலும் நீங்கள் என்னுடன் வந்துதான் ஆக வேண்டும் என்று கோபி சொல்ல வேறு வழியில்லாமல் ஈஸ்வரியும் சம்மதம் சொல்கிறாள்.

அதன்பிறகு எழில் பாக்யா இருவரும் கிச்சனில் பேசிக்கொண்டிருக்க, அங்கு வரும் கோபி, என்னை அசிங்கப்படுத்தி வீட்டை விட்டு வெளியில் அனுப்பிவிட்டு நீங்கள் சந்தோஷமாக இருக்கீங்களா என்று கேட்க, அசிங்கப்படுத்துகிறோம் என்று தெரியுதுல்ல, அப்புறம் எதற்காக இங்கு இருக்கீங்க வெளியில் போங்க என்று எழில், சொல்ல, ரெஸ்டாரண்டில் இருந்து செல்வி பாக்யாவுக்கு போன் செய்கிறாள். அதன்பிறகு ரெஸ்டாரண்ட்டுக்கு கிளம்பும் பாக்யா, தேவையில்லாமல் பேசிக்கிட்டு இருக்காதே என்று சொல்லிவி்ட்டு செல்கிறாள்.

Advertisment
Advertisements

என்னை அசிங்கப்படுத்திட்டே இருக்கீங்கல்ல உங்களுக்கு பெரிய ஆப்பா வைக்கிறேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி ராதிகா ரூமுக்கு வரும் கோபி, என் அம்மாவும் நம்ம கூட வரறாங்க என்று சொல்ல, அவங்களுக்கு என்னை பிடிக்காது எனக்கு அவங்களை பிடிக்காது. என் கர்ப்பமும் அவங்களுக்கு பிடிக்காது இந்த நிலைமையில் ஏன் தேவையில்லாத வேலை பாக்குறீங்க கோபி என்று ராதிகா கேட்க, கோபி விடாபிடியாக அம்மாவை அழைத்து செல்வது உறுதி என்று சொல்கிறான். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: