Advertisment

வீட்டை விட்டு கிளம்பிய ஈஸ்வரி : வழி விட்ட பாக்யா ; ராதிகா வீட்டில் என்ன நடக்குமோ!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்

author-image
WebDesk
New Update
baakiya11
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

விஜய்  டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாக்யா வீட்டை விட்டு கிளம்பும் கோபி, தனது அம்மா ஈஸ்வரியையும் கூட்டிக்கிட்டு செல்கிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisment

இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், ராமமூர்த்தியிடம் தனியாக பேச வேண்டும் என்று ஈஸ்வரி அழைக்க, நானும் உன்னிடம் தனியாக பேச வேண்டும் என்று ராமமூர்த்தி சொல்கிறார். கோபி இப்படி ஒரு கேடுகெட்ட வேலையை செய்திருக்கிறான். அதை என்னிடம் சொல்லாம மறைச்சிருக்க என்று கேட்க, எல்லாரையும்போல நீங்களும் அவனை தப்பா நினைக்காதீங்க என்று ஈஸ்வரி சொல்கிறாள்.

மேலும் தப்பே பண்ணாலும் அவன் நம்ம பையன் என்று சொல்ல, ராமமூர்த்தி மேலும் கோபப்பட்டு, இப்படியே பேசிட்டு இருந்த நீயும் அவனோடவே போய்டு என்று சொல்லிடுவேன் என்று ராமமூர்த்தி சொல்ல, நீங்க என்ன சொல்றது நான் அவனோட தான் போகப்போகிறேன் என்று ஈஸ்வரி அதிர்ச்சி கொடுக்க, தாளராளமா போ, நீ அங்க போனாதான் இந்த வீட்டோட அருமையும் பாக்யாவின் அருமையும் தெரியும் என்று  ராமமூர்த்தி சொல்கிறார்.

அதன்பிறகு ராதிகாவுடன் கீழே வரும் கோபி, ஈஸ்வரியை அழைக்க, அவங்க உள்ள இருக்காங்க, நீங்க போங்க நாங்க சொல்லிக்கிறோம் என்று சொல்ல, கோபி மீண்டும் அம்மா என்று சொல்ல, இப்படி பாட்டி வந்து என் பிள்ளை இல்லாம என்னால இருக்க முடியாதுனு சொல்லனும் அதானே உங்க ப்ளான என்று எழில் கேட்க, ஈஸ்வரி பெட்டியுடன் என்டரி கொடுக்க, அனைவரும் அதிர்ச்சியாகின்றனர்.

அப்போது நான் இந்த வீட்டை விட்டு போகிறேன். என் அம்மா யார் கூட இருக்கனும்னு நான் தான் முடிவு செய்யனும் இப்போ அவங்க என்கூட வரப்போறாங்க என்று சொல்ல, அனைவரும் ஷாக் ஆகின்றனர். இதை கேட்ட ராமமூர்த்தி, போகட்டும் விடுங்க எல்லாம் அமைதியா இருங்க என்று சொல்ல, ராதிகா, கோபி, ஈஸ்வரி மூவரும் வீட்டு வாசலுக்கு வரும்போது பாக்யா என்டரி ஆகிறார். ஈஸ்வரி வீட்டை விட்டு போவதை பார்க்கும் பாக்யா அதிர்ச்சியில் இருக்கிறார்.

அப்போது அத்தை நீங்க இங்கதான் இருக்கனும்னு கெஞ்சு என்று கோபி மனதிற்குள் சந்தோஷமாக இருக்க, பாக்யா ஈஸ்வரிக்கு வழி விட்டு இருவரையும் நோஸ்கட் செய்கிறார். அதன்பிறகு என் மகன் இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்று ஈஸ்வரி சொல்ல, இப்போ நான் எதுவும் சொல்லல அத்தை என்று பாக்யா சொல்கிறார். நான் எப்போ போவேனுதான் எதிர்பார்த்தியா என்று ஈஸ்வரி கேட்க, நீ ஒரு முடிவு எடுத்துட்டு பாக்யா மீது பழி போடாதே என்று ராமமூர்த்தி சொல்கிறார்.

அடுத்ததாக ராதிகா வீட்டுக்கு வர, அவரின் அம்மா என்ன நீ மட்டும் வர மாப்பிள்ளை வரலையா என்று கேட்க, கோபி ஈஸ்வரியுடன் என்ட்ரி கொடுக்க, கோபியை பார்த்த மயூ சந்தோஷமடைகிறாள். ஆனால் ஈஸ்வரியும் ராதிகாவின் அம்மாவும் முறைத்துக்கொள்கின்றனர். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment