Advertisment

ஈஸ்வரிக்கு செக் வைத்த கமலா : முற்றிய சம்பந்திகள் மோதல் ; கோபி சமாளிப்பாரா?

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்

author-image
WebDesk
New Update
baakiya11

பாக்கியலட்சுமி சீரியல்

கோபி ராதிகா மட்டுமல்லாமல் தனது அம்மா ஈஸ்வரியையும் அழைத்துக்கொண்டு சென்றதால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

Advertisment

இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில் ஈஸ்வரி கோபியின் வீட்டுக்கு வர, ராதிகாவின் அம்மா கமலாவுக்கு ஈஸ்வரி வந்தது பிடிக்கவில்லை. இதனால் தண்ணீர் எடுத்து வருவதாக சொல்லிவிட்டு, கிச்சனில் சென்று, நீ வந்த சரி, மாப்பிள்ளை வந்தார் ஓகே கூடவே இந்த அம்மா எதற்காக வந்துருக்கு என்று கேட்க, நான் சொன்னேன். அவர் கேட்கவில்லை என்று ராதிகா சலித்துக்கொள்கிறாள்.

அதன்பிறகு இன்னும் 2 நாள் தான் டைம். அந்த அம்மா இங்கிருந்து போய்டனும். இல்லனா நானே போக வச்சிடுவேன் என்று சொல்ல, சண்டை எதுவும் போட்டுடாதேமா என்று ராதிகா சொல்ல நான் வாயே திறக்க மாட்டேன். ஆனால் அந்த அம்மாவை இங்கிருந்து போக வச்சிடுவேன் என்று சொல்ல ராதிகா ஷாக் ஆகிறாள். மறுப்பக்கம் கோபி, ஈஸ்வரியிடம் நீங்கள் இங்கு மகாராணி மாதிரி இருக்கலாம் என்று சொல்கிறான்.

நான் வந்தது ராதிகாவின் அம்மாவுக்கு பிடிக்கவில்லை. அந்த அம்மா மூஞ்சி காத்து போன பலூன் மாதிரி ஆகிடுச்சி என்று ஈஸ்வரி சொல்ல, இங்கு உனக்கு எந்த பிரச்சனையும் வராது நீங்கள் சந்தோஷமாக இருக்கலாம் என்று கோபி சொல்கிறான். அதன்பிறகு பாக்யா வீட்டில் அனைவரும் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, பாட்டி இங்கு ரொம்ப நாள் இருக்க மாட்டாங்க. அங்க சாப்பாடு சரி இல்லை தனி அவங்கால அங்கு தாக்குபிடிக்க முடியாது என்று இனியா சொல்கிறாள்.

இதை கேட்ட ராமமூர்த்தி அவளுக்கு பட்டாதான் புத்தி வரும். அவ அங்கு இருக்க வரைக்கும் நான் சந்தோஷமாக இருப்பேன் என்று சொல்கிறார். அடுத்து கோபி ஈஸ்வரிக்காக படுக்கை தயார் செய்ய வேண்டும் என்று சொல்ல, மொட்டை மாடியில் ஏற்பாடு செய்யலாமா என்று ராதிகா கேட்க, அம்மாவுக்கு மூட்டுவலி அவங்களால மாடிப்படி ஏற முடியாது என்று சொல்ல, லிப்ட் வச்சிடலாமே என்று ராதிகா சொல்ல நல்ல யோசனை என்று கோபி சொல்கிறான்.

இதை கேட்ட ராதிகா இது வாடகை வீடு ஞாபகம் இருக்கா என்று கோபியை பார்த்து கேட்கிறாள். அதன்பிறகு ஹாலில் இருக்கும் ஈஸ்வரி தண்ணீர் கேட்க, கிச்சனில் இருக்கும் கமலா கண்டுகொள்ளாமல் இருக்கிறாள். கேட்டு கேட்டு பார்த்துவிட்டு கிச்சனுக்கு செல்லும் ஈஸ்வரி, தண்ணி கேட்டேனே காதில் விழலையா என்று கேட்க, எனக்கு கேட்கவில்லை என்று கமலா சொல்கிறார். பிறகு ஈஸ்வரி ராதிகாவை கூப்பிடு என்று சொல்ல, அவ ரெஸ்ட் எடுக்கிறாள் என்று கமலா சொல்கிறாள்.

இது ஒன்னும் ஹோட்டல் இல்லை. உங்களுக்கு தண்ணீர் வேண்டும் என்றால் நீங்கள் தான் எடுத்து குடிக்க வேண்டும் என்று கமலா சொல்ல, ஷாக் ஆன ஈஸ்வரி அடுத்து பால் இல்லையா என்று கேட்க, கமலா ஒன்றும் பேசாமல் இருக்கிறார். அடுத்து ஈஸ்வரி பாலை தேடும்போது பால் கொட்டிவிடுகிறது. இதை பார்த்து ஈஸ்வரி வேறு பால் இல்லையா என்று கேட்க, கமலா இல்லை என்று சொன்னதும் ஈஸ்வரி அங்கிருந்து கிளம்புகிறாள்.

அப்போது இதை யார் க்ளீன் பண்ணுவார் என்று கமலா கேட்க, நீ க்ளீன் பண்ணு இல்லனா என் பொண்ண கூப்பிட்டு க்ளீன் பண்ண சொல்லு என்று சொல்லிவிட்டு செல்கிறாள். இதை கேட்ட கமலா நீ இங்க வந்தது எனக்கு சுத்தமா பிடிக்கல என்று சொல்ல, நான் கொஞ்சநாள் இருந்துட்டு போலாம்னுதான் நினைத்தேன். எப்போ நீ என்னை பிடிக்கலைனு சொன்னியோ இனிமேல் நான் இங்கே தான் இருப்பேன் என்று ஈஸ்வரி சொல்கிறாள்.

மறுப்பக்கம் செழியன் சாக்லேட் கொடுத்து ஜெனிய சமாதானப்படுத்துகிறான் இருவருக்கும் இடையே அன்பு உருவாக அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment