/tamil-ie/media/media_files/uploads/2022/10/Tamil-Cinema.jpg)
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதை தொடர்ந்து விஜய் டிவியின் பாக்யலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மகாசங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது.
தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள பாக்யலட்சுமி சீரியலில் பெரிய கலவரங்களுக்கு மத்தியில் கோபி ராதிகாவை திருமணம் செய்துவிட்டார். தற்போது அவர் ஹனிமூனுக்காக கொடைக்கானல் வந்துள்ளார் ராதிகாவுடன். இந்த பக்கம் எழில் தனது குடும்பத்தை கொடைக்கானலுக்கு அழைத்து வந்துள்ளார். அதேபோல் உறவினர் திருமணத்திற்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி, தனம் கண்ணன் ஐஸ்வர்யா ஆகியோர் வந்துள்ளனர்.
இதில் இன்றைய எபிசோட்டில், கோபி ராதிகாவுடன் வந்து கொடைக்கானலில் இறங்கியவுடன், மயூவிடம் இருந்து போன் வர ராதிகா போன் பேச, செல்கிறார். அப்போது கோபி ஹோட்டலுக்கு சென்று தனது பழைய நண்பரை மீட் செய்துவிட்டு செக்இன் செய்கிறார். அங்கு கோபிக்கு அவார்டு கொடுப்பதாக சொல்லும் அவனது நண்பன் பாக்யாவை கூட்டிக்கிட்டு வரலையா என்று கேட்கிறார்.
அவரை சமாளித்துவிட்டு செல்லும்கோபி. ராதிகாவுடன் ரூமுக்கு செல்கிறார். அப்போது ராதிகா உங்க ப்ரண்டுக்கு என்னை ஏன் அறிமுகம் செய்து வைக்கல என்று கேட்க, நீ போன் பேசிக்கிட்டு இருந்த என்று சொல்லி சமாளிக்கிறார். கோபி. அதன்பிறகு பாக்யாவை டைவர்ஸ் பண்ணிட்டு ராதிகாவை கல்யாணம் பண்ணிக்கிட்டது அவனுக்கு தெரியா அட்வைஸ் மேல அட்வைஸா பண்ணுவானே என்று நினைக்கும் கோபி எப்படியாவது இந்த அவார்டு பங்ஷனை நிறுத்தவேண்டும் என்று யோசிக்கிறார்.
அடுத்து எழில் தனது ஃபேமிலியுடன் கோபி தங்கியிருக்கும் அதே ஹோட்டலுக்கு வருகிறான். அதேபோல் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஃபேமிலியும் அதே ஹோட்டலுக்கு வருகின்றனர். இதற்கிடையில் நாளை அவார்டு பங்ஷன் பற்றி பேசிக்கொண்டிருக்கும் ராதிகாவை பார்த்து ஜாலியாக பொழுதை கழிக்கலாம் என்று நினைத்தாலும் மயூ போன் செய்துகொண்டே இருக்காளே என்று நினைக்கிறான் கோபி.
அப்போது கோபி அறையின் பக்கத்து அறையில் எழில் தனது குடும்பத்துடன் தங்குகிறான். அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.