ஈஸ்வரி கொடுத்த டார்ச்சர் : பாக்யாவை புரிந்துகொள்ளும் கோபி ; இனியாவுக்கு சிக்கல்?

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்

author-image
WebDesk
New Update
backia Go

பாக்கியலட்சுமி கோபி

ஈஸ்வரியின் குணத்தை தெரிந்துகொண்ட கோபி, தற்போது பாக்யாவை பற்றி தெரிந்துகொண்ட நிலையில், பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

Advertisment

இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், இனியா சோகமாக உட்கார்ந்திருக்க, அங்கு வரும் விமல் என்னாச்சு என்று விசாரிக்கிறான். நான் ப்ராஜக்ட் பண்ணவே இல்லை. நாளைக்கு சப்மிட் பண்ணணும் என்று சொல்ல, விமல் திடீரென தனது பிராஜக்டை கொடுக்கிறான். இதை பார்த்து இனியா சர்ப்ரைஸ் ஆனதை தொடர்ந்து, இனியா விமல் இருவரும் பேசிக்கொண் இருக்கின்றனர்.

அந்த நேரத்தில் அங்கு வரும் பாக்யா, நீ இங்க என்ன பண்ற என்று கேடக், இனியா ப்ராஜக்டில் டவுட்டுனு சொன்னாங்க, அதன் க்ளியர் பண்ணேன் என்று சொல்ல, நீ் இங்கு வந்தது உங்க மாமாவுக்கு தெரியுமா என்று கேட்க, இதையெல்லாமா சொல்லிட்டு இருப்பாங்க என்று விமல் கேட்கிறான். நீ இப்போ உங்க மாமா பாதுகாப்பி இருக்க, நீ எங்க போற வர்றனு சொல்லனும் என்று விமலுக்கு பாக்யா அட்வைஸ் பண்ணுகிறாள்.

மேலும் நீ சொல்லப்போறியோ இல்லையோ நான் சொல்லப்போகிறேன் என்று சொல்கிறாள். அதன்பிறகு உனக்கு ப்ராஜக்டில் டவுட் வந்த அதை எழிலிடமோ அல்லது செழியனிடமோ கேட்டிருக்கலாமே என்று இனியாவிடம் கேட்க, எதார்த்தமா பேசும்போது ப்ராஜக்ட் பற்றி பேசினோம் என்று சொல்ல, நீ இன்னும் விமலிடம் பேசிட்டுதான் இருக்கியா என்று கேடக், எப்போவாது பேசுறேன்மா என்று சொல்கிறாள்.

Advertisment
Advertisements

இதை கேட்க, பாக்யா சும்மாதானே பேசிட்டு இருக்க என்று கேட்க, கேஷ்யூவலாகத்தான் பேசிட்டு இருக்கேன்மா என்று சொல்கிறாள் இனியா. மறுபக்கம், ஜெனி நான் இப்போ அதிகமாக கோபப்படுகிறேன். நான் ஏன் இப்படி பண்றேனு எனக்கே தெரியவில்லை என்று எழிலிடம் மன்னிப்பு கேட்கிறாள். அதன்பிறகு வீட்டுக்கு வரும் செழியன், ஜெனியை சாப்பிட வெளியில் கூட்டிச்செல்வதாக சொல்ல, குழந்தையை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அனுப்பி வைக்கிறாள்.

இந்த பக்கம், கோபி வீட்டுக்கு வந்ததும், ஈஸ்வரி வழக்கம்போல் பிரச்சனையை சொல்ல, உங்க அம்மா வந்ததுக்கு அப்புறம் தான் இங்கு பிரச்சனையே வந்துட்டு இருக்கு என்று ராதிகா கூறும் ராதிகா, பாக்யா எப்படித்தான் இவங்களை சமாளித்தாங்களோ என்று கேட்கிறாள். அதன்பிறகு கோபி தனியாக உட்கார்ந்து ராதிகா சொல்வது சரிதான் பாக்யா எப்படி 27 வருடமா சமாளிச்சானு தெரியலையே என்று யோசிக்கிறார். அதன்பிறகு ஜெனியை கூட்டிக்கொண்டு ரெஸ்டாரண்ட் கூட்டிப்போகும் செழியன் அவள் விரும்பியதை ஆர்டர் செய்கிறான் அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Baakiyalakshmi Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: