/indian-express-tamil/media/media_files/PSzjkxjNmZiJmrvSdG1H.jpg)
பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றனர். பாக்யாவை பழி வாங்குவதற்காக தனது அம்மா ஈஸ்வரியை தன்னுடன் அழைத்து சென்ற கோபி, தற்போது கொலைகாரி பட்டம் கொடுத்து வீட்டை விட்டு துரத்திவிட்டதால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதனிடையே நேற்றைய எபிசோட்டில், பாக்யா, கோபியிடம் சென்று ஈஸ்வரிக்கு ஆதரவாக பேசிய நிலையில், இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில் ஈஸ்வரிக்கு ஆறுதல் சொல்லும் பாக்யா, அத்தை ஆசைப்பட்டதை போல் கும்பகோணம் சென்றுவரட்டும் என்று சொல்ல, முதலில் தயங்கும் ராமமூர்த்தி பிறகு ஒப்புக்கொள்கிறார்.
அதன்பிறகு செல்வி, ஜெனி ஆகிய இருவரும் வீட்டை பார்த்துக்கொள்ளட்டும். அமிர்தா ரெஸ்டாரண்டடை பார்த்துக்கொள்வார் என்று சொல்லிவிட்டு, இனியாவை தன்னுடன் அழைத்து செல்ல, பாக்யா முடிவு செய்கிறாள். ஆனால் கோவில் என்பதால் இனியா வர மறுக்க, பாக்யா அவளை திட்டி வரவழைக்கிறாள். அடுத்து ரெஸ்டாரண்டில் இருக்கும் கோபி, பாக்யா சொன்ன வார்த்தைகளை நினைத்து பார்க்கிறான்.
அப்போது ஹோட்டலில் உள்ள அனைவரும் வந்து கேள்வி மேல் கேள்வி கேட்க, அனைவரையும் திட்டிவிட்டு வெளியில் செல்லும் கோபி, மீண்டும் குடிக்க தொடங்குகிறான். பாரில் குடித்துக்கொண்டிருக்கும்போது, அங்கு வரும் கோபியின் நண்பன், ராதிகாவை கல்யாணம் செய்யும் முன்பு சிங்கமான இருந்தேன். இப்போது அசிங்கமாக இருக்கிறேன் என்று புலம்புகிறான். அதன்பிறகு குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் கோபியை பார்த்த ராதிகாவின் அம்மா கமலா முகத்தை சுளித்துக்கொண்டு செல்கிறாள்.
கோபி மீண்டும் குடித்திருப்பதை பார்த்த ராதிகா, கோபப்பட்டு பேச, கோபியிடம் பேச வரும் மயூவையும் திட்டிவிடுகிறாள் ராதிகா. இதனால் கோபி அதிர்ச்சியாக அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.