விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அடுத்து 3 நாட்களுக்கான ப்ரமோ தற்போது வெளியாகி சீரியல் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
Advertisment
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவை பிரிந்து ராதிகாவை திருமணம் செய்துகொண்ட கோபி, பாக்யாவை பழிவாங்க ஈஸ்வரியை கூட்டி வந்த கோபிக்கு, ஈஸ்வரியை சமாளிக்க முடியாமல் திணறினார். அதன்பிறகு கடந்த சில தினங்களுக்கு முன்பு, கர்ப்பமாக இருந்த ராதிகா தடுக்கி விழுந்து கர்ப்பம் கலைந்துவிட்ட நிலையில், ஈஸ்வரிதான் தள்ளிவிட்டார் என்று கூறி அவர் மீது பழி போட்டுவிட்டனர்.
இதை கேட்ட கோபியும் ஈஸ்வரியை திட்டி வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார். இதனால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டில் இருந்து வெளியேறிய ஈஸ்வரியை மீண்டும் தனது வீட்டுக்கே கூட்டிச்சென்ற பாக்யா, அவரை ஆறுதல்படுத்துவதற்காக, அவரை கும்பகோணத்திற்கு அழைத்து சென்றுள்ள பாக்யா, ஈஸ்வரியின் நெருங்கிய தோழியை வரவழைத்து ஈஸ்வரிக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருந்தார்.
ஈஸ்வரி வெளியில் போனதை தாங்கிக்கொள்ள முடியாத கோபி, மீண்டும் குடிக்க தொடங்கிவிட்டதால், ராதிகா கமலா இருவரும் கோபியிடம் மல்லுக்கு நிற்கின்றனர். ராதிகாவின் அம்மா கமலா வழக்கம்போல் ஈஸ்வரி குறித்து தவறாக பேச, கடுப்பான கோபி, எங்க அம்மாவை பற்றி தவறாக பேசினீர்கள் என்றால் என்று கூறிக்கொண்டு கமலாவை அடிக்க கை ஓங்கிக்கொண்டு செல்ல, இதை பார்த்து கமலா மிரண்டுபோய் நிற்கிறார்.
Advertisment
Advertisements
இதை பார்த்து ராதிகா கோபியின் சட்டையை பிடித்து எங்க அம்மாவை எப்படி நீங்கள் அடிக்க போகலாம் அவரிடம் மன்னிப்பு கேளுங்கள் என்று சொல்ல, கோபி முடியாது என்று சொல்லிவிடுகிறான். இதனிடையே நேற்றைய எபிசோட்டில் நான் வருவதற்குள் இங்கிருந்து போய்விடுங்கள் என்று கோபி எச்சரித்துவிட்டு ரெஸ்டாரண்ட் கிளம்பி சென்றுவிட்ட நிலையில், கமலா ஈஸ்வரி மீது போலீஸில் புகார் கொடுத்துவிட்டார். இதனால் ஈஸ்வரியை தேடி போலீஸ் பாக்யா வீட்டுக்கு சென்றது.
இதனிடையே தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில், கும்பகோணம் சென்றிருந்த ஈஸ்வரி வீடு திரும்பிய நிலையில், ராதிகா அம்மா கொடுத்த புகார் காரணமாக அவரை போலீஸ் கைது செய்து அழைத்து செல்கிறது. இதை பார்த்த பாக்யா குடும்பத்தினர் அவர் அப்பா செய்திருக்க மாட்டார் என்று சொன்னாலும், ஈஸ்வரியை போலீஸ் ஜீப்பில் ஏற்றிய நிலையில், இதை பார்த்த கோபி என்ன போலீஸ் ஜீப் வந்துட்டு போகுது என்று பாக்யா வீட்டுக்கு வருகிறார்.
அப்போது கடுப்பான ராமமூர்த்தி இங்க எதுக்குடா வந்த என்று கோபியை பளார் பளார் என்று அடுத்துவிட்டு எப்படி இருந்தவ தெரியுமா இப்படி கொண்டு வந்து விட்டுட்டியேடா என்று சொல்ல அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“