Advertisment

ஈஸ்வரியை எதிர்த்த பாக்யா : கமலாவுக்கு செக் வைத்த ராதிகா : அடுத்து என்ன?

பாக்யாவை விட்டு கோபி வீட்டுக்கு சென்றுவிட்ட ஈஸ்வரியை பாக்யா எதிர்த்து பேசியுள்ளார்.

author-image
WebDesk
New Update
baakiya11

பாக்கியலட்சுமி சீரியல்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

Advertisment

இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், வாக்கிங் வந்த இடத்தில் ஜெனிக்கு அட்வைஸ் செய்துகொண்டு பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு ஈஸ்வரி வர, அவரது கண்ணில் பட்டுவிடாமல் சென்றுவிடலாம் என்று பாக்யா நினைக்க, ஈஸ்வரி அவர்களை பார்த்துவிடுகிறாள். பார்த்தவுடன், என்ன ட்ரெஸ் இது என்று ஜெனியை சத்தம்போடுகிறான்.

உடனே பாக்யா, நைட் தூங்கலையா அத்தை? கண்ணெல்லாம் சிவந்து கிடக்கு என்று கேட்க, நீ என்ன பேச்சை மாத்துறியா என்று கேட்டுவிட்டு, மீண்டும ஜெனி ட்ரெஸ் பற்றி கேட்கிறாள். நாமதா புடவை கட்டி பழகிட்டோம். அவளாவது பிடித்த ட்ரெஸ் போடட்டுமே என்று என்று பாக்யா சொல்ல, இதெல்லாம் உன் வேலையா என்று கேட்க, ஆமாம் என்று பாக்யா சொல்கிறாள். அதன்பிறகு நான் வீட்ல இல்லனு ஓவரா ஆடுறியா என்று ஈஸ்வரி கேட்கிறாள்.

இதை கேட்ட பாக்யா, ஆமாம் நீங்க இல்லனுதா ஆடுறேன். நீங்கவேன வீட்டுக்கு வந்துடுங்க என்று சொல்ல, முடியாது நான் என் பையன் வீட்ல தான் இருப்பேன் என்று சொல்லிவிட்டு, உனக்கு ரெஸ்டாரண்ட்க்கு டைம் ஆகுது நீ போ என்று சொல்ல பாக்யா அங்கிருந்து கிளம்பிவிடுகிறாள். இங்கு ஈஸ்வரி ராதிகா வீட்டில் கமலா மரியாதை இல்லாமல் பேசுவதாக கோபியிடம் சொல்ல, கோபி கமலாவிடம் கேட்க, நான் அப்படியெல்லாம் ஒன்னும் பேசலையே என்று சொல்கிறாள்.

இதை கேட்ட ஈஸ்வரி சத்யமா அப்படிதான் பேசினா என்று சொல்ல, எங்க அம்மா பொய் சொல்ல மாட்டாங்க என்று கோபி சப்போர்ட் பண்ண, ராதிகா கமலாவிடம் கேட்கிறாள். அப்போதும் கமலா நான் அப்படி பண்ணவில்லை என்று சொல்கிறாள். அடுத்து மயூவை அழைத்து விசாரிக்க, மயூ நடந்தை சொல்லிவிடுகிறாள். இதை கேட்ட ராதிகா கமலாவை திட்டுகிறாள்.

இந்த பக்கம், ரெஸ்டாரண்ட் பக்கத்தில் பார் வைத்திருந்தவரிடம் பாக்யா பாக்கி தொகையை கேட்க, அவர் தர மறுக்கிறார். அப்போது அங்கு வரும் பழனிச்சாமி, அந்த பார் ஓனரிடம் பேச உடனடியாக பணத்தை கொடுத்துவிட்டு செல்கிறார். அதன்பிறகு விமல் இனியாவுடன் பழகுவதை பற்றி பாக்யா பழனிச்சாமியிடம் சொல்ல, நான் இது பற்றி விமலிடம் பேசுகிறேன் என்று பழனிச்சாமி சொல்ல, அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment