சுதாகருக்கு பதிலடி கொடுத்த பாக்யா; எதிரியாக வரும் புது ரவுடி: புது தொழில் தொடங்குமா?

பாக்யா புதிய தொழில் தொடங்க, அதற்கு புதிய எதிரி வந்திருக்கும் நிலையில், சுதாகருக்கு இனியா சரியாக பதிலடி கொடுத்துள்ளார்.

பாக்யா புதிய தொழில் தொடங்க, அதற்கு புதிய எதிரி வந்திருக்கும் நிலையில், சுதாகருக்கு இனியா சரியாக பதிலடி கொடுத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Ba su Serial

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், பாக்யா புதிய தொழில் தொடங்க, அதற்கு புதிய எதிரி வந்திருக்கும் நிலையில், சுதாகருக்கு இனியா சரியாக பதிலடி கொடுத்துள்ளார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisment

இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், பாக்யா ரெஸ்டாரண்ட் தொடங்குவது குறித்து செழியனிடம் பேசும் சுதாகர், ஒரு இடத்தில் இருந்து மேலேதான் போக வேண்டும். ஆனால் உங்க அம்மா கீழே போகிறார். இதை நீங்கள் எதுவும் சொல்லவில்லையா என்று கேட்க, நாங்கள் சொன்னோம். அம்மாதான் கேட்கவில்லை என்று செழியன் சொல்கிறான். மேலும் இந்த இடத்தில் இருந்து என்னால் மேலே வர முடியும் என்று பாக்யா சொல்வதாக சொல்கிறான்.

சுதாசகர் கிளம்பும்போது பாக்யா அங்கே வர, உங்கள் பிஸினஸ்க்கு எனது வாழ்த்துக்கள் சொல்ல வந்தேன். ஆனால் உங்க சம்பந்தி உங்க அளவுக்கு இல்லை. கையேந்தி பவன் நடத்துகிறார் என்று கேட்டால் நான் என்ன சொல்வது என்று சுதாகர் கேட்க, என் சம்பந்தி ரெஸ்டாரண்ட் வைத்து தொழிலதிபராத்தான் இருந்தாங்க, ஆனால் பாசத்திற்கு ஏமாற்றப்பட்டு இப்போ கையேந்திபவன் நடத்திட்டு இருக்காங்க, அப்படினு சொல்லுங்க என்று பாக்யா சொல்லிட்டு அங்கிருந்து புறப்படுகிறாள்.

மறுபக்கம் இனியா கொடுத்த சாக்லேட்டை சாப்பிட்டுக்கொண்டிருக்கும் ஈஸ்வரி உங்க அம்மா அங்க வந்து எதுவும் பிரச்னை பண்ணாலா என்று கேட்க, கிளம்பும்போது சுதாகரிடம் பிரச்னை செய்வது போல் பேசிவிட்டு வந்துவிட்டார் என்று சொல்கிறான் செழியன். இதனால் ஈஸ்வரி வழக்கம்போல் பாக்யாவை திட்டிக்கொண்டு இருக்கிறாள். இதை கேட்ட பாக்யா, நான் யாரையும் மட்டம் தட்டி பேச, எது உண்மையோ அதைத்தான் பேசினேன் என்று பாக்யா சொல்ல, ஈஸ்வரி மீண்டும் திட்டி திட்டி பேசுகிறாள்.

Advertisment
Advertisements

இந்த பக்கம், பாக்யா சொன்ன ஸ்டைலில் ஸ்வீட்டி செய்த இனியா அதை அனைவருக்கும் கொடுக்க, சுதாகர் என்ன விஷேஷம் என்று விசாரிக்கிறான். அம்மா 3-வது ரெஸ்டாரண்ட் ஓபன் பண்ண போறாங்க, அதற்கு தான் இந்த ஸ்வீட் செய்யலாமா தப்பில்லையே என்று கேட்க,செய்யலாம் என்று சொல்லும் சுதாகர் கோபப்படுகிறான். அப்போது பாக்யா ரெஸ்டாரண்ட் திறப்பு விழாவுக்கு போக கூடாது என்று சொல்லும் சுதாகர், இனியாவை கட்டுப்படுத்த ஒரு ஐடியாவை கொடுக்கிறான். இனியாவும் இதை கண்டுகொள்ளாமல் இருக்கறாள்.

மறுபக்கம் பாக்யா ரெஸ்டாரண்டில் இருக்க, அங்கு வரும் ஒரு ரவுடி, இனிமே நாங்க இங்க தினமும் சாப்பிட வருவோம் என்று சொல்லிவிட்டு போக, நீங்க கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று இடத்தின் முதலாளி சொல்கிறார். அப்போது செல்வி நாம எங்க போனாலும் ஒரு பிரச்னை வந்துகொண்டே இருக்கிறது என்று சொல்ல, பாக்யா வீட்டில் இருந்து ரெஸ்டாரண்ட் திறப்பு விழாவுக்கு ஆட்கள் வருகிறார்கள். அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

Baakiyalakshmi Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: