Advertisment

நடித்து ஏமாற்றும் ஈஸ்வரி: ஜெனியால் வரும் பிரச்சனை ; சிக்கலில் கோபி - பாக்யா!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Baakiyalakshmi

பாக்கியலட்சுமி சீரியல்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

Advertisment

இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், ஈஸ்வரி மயக்கம் வந்த போல் நடிக்க, அதை பார்த்த கோபி பதறிப்போய், அம்மாவுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு, ரெஸ்டாரண்ட்க்கு கிளம்பி செல்கிறான். இதை பார்த்த ஈஸ்வரி இன்னைக்கு ஒருநாள் என் கூடவே இரு கோபி எனக்கு எதாவது கொடுத்திடுவாங்களோனு எனக்கு பயமாக இருக்கிறது என்று ஈஸ்வரி சொல்கிறாள். ஆனாலும் கோபி நான் சீக்கிரமா வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு செல்கிறான்.

கோபி வீட்டை விட்டு வெளியில் சென்றதும், ஈஸ்வரி கால்மேல் கால் போட்டுக்கொண்டு டிவி பார்க்க, ராதிகாவும் அவளது அம்மாவும், அதிர்ச்சியில் பார்க்கின்றனர். இந்த பக்கம் பாக்யா வீட்டில் ஜெனி தாத்தாவுக்கு சாப்பாடு கொடுக்க வருகிறாள். ஆனால் அதற்கு முன்பாகவே அமிர்தா சாப்பாடு கொடுத்துவிடுகிறாள். இதை பார்த்து ஜெனி அதிர்ச்சியில் நிற்க ராமமூர்த்தி என்னம்மா என்று கேட்க, சும்மாதான் தாத்தா என்று சொல்லிவிட்டு செல்கிறாள் ஜெனி.

அதன்பிறகு அமிர்தாவிடம் வந்து, தாத்தாவுக்கு சாப்பாடு கொடுத்த சொல்ல மாட்டீங்களா என்று ஜெனி கேட்க, தாத்தாவுக்கு சாப்பாடு கொடுக்க, உங்களை கேட்டுதான் கொடுக்கனுமா என்று அமிர்தா கேட்க, அங்கே மோதல் முற்றுகிறது. அடுத்ததாக கோபி வீட்டில், கமலா ராதிகாவுக்கு ஆப்பிள் கட் பண்ணி வைத்துவிட்டு கிச்சனுக்கு போக, ஈஸ்வரி அந்த ஆப்பிளை எடுத்து சாப்பிட்டுவிடுகிறாள். இதை பார்த்து கமலா உச்சக்காட்ட கோபமாகிறாள்.

இதை பார்த்த ராதிகா, உங்களுக்கு சுகர் இருக்கிறது. இப்படி ஆப்பிளை சாப்பிட்டுவிட்டு மயக்கம் போட்டு விழுந்துவிட்டால், கோபி எங்களைத்தான் எதாவது சொல்வார் என்று சொல்லி, தட்டை பிடிங்கிக்கொள்ள, உடனடியாக கோபிக்கு போன் செய்யும் ஈஸ்வரி, சாப்பிடுமபோது தட்டை பிடிங்கிட்டாங்கடா, ராதிகாதான் இப்படியெல்லாம் பண்றா என்று சொல்ல, கோபி ராதிகாவுக்கு போன் செய்து திட்டிவிட்டு, ராதிகா சொல்ல வரவதை கூட கேட்காமல் போனை கட் செய்துவிடுகிறான்.

அதன்பிறகு இதை நீங்களே சாப்பிடுங்கள் என்று ஆப்பிள் தட்டை ராதிகா மீண்டும் ஈஸ்வரியிடம் கொடுக்க, எனக்கு வேண்டாம் எனக்கு சுகர் இருக்கு என்று சொல்கிறாள். இதனால் ராதிகா மேலும் கோபமாகிறாள். இங்கு பாக்யா வீட்டில் ஜெனி தாத்தாவிடம் பேசும்போது, பாக்யாவும் எழிலும் வருகின்றனர். அப்போது தனது கதையை தயாரிப்பாளர் ஓகே சொல்லிவிட்டதாக எழில் சொல்ல எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர்.

பாட்டியிடம் இந்த விஷயத்தை சொல்ல வேண்டும் என்று எழில், ஈஸ்வரிக்கு போன் போட, ஈஸ்வரி வேண்டுமென்றே போனை எடுக்காமல் இருக்கிறாள். பிறகு தாத்தா போனில் இருந்து போன் பண்ண அப்போது எடுக்கிறாள். எழில் விஷயத்தை சொல்ல, ஈஸ்வரி சந்தோஷப்பட்டாலும், காட்டிக்கொள்ளாமல் சரி ஓகே என்று சொல்ல, இவ்வளவு தான் சந்தோஷமா என்று எழில் கேட்க, நீ குழந்தை பெற்றுக்கொள் சந்தோஷப்படுகிறேக் என்று ஈஸ்வரி சொல்கிறாள்.

இதை கேட்ட, கமலா யாரிடமோ குழந்தை பெற்றுக்கொள்ள சொல்றாங்க, சொந்த மகன் குழந்தை பெத்துகிட்ட கஷ்டப்படுறாங்க, இதை கேட்ட ஈஸ்வரி இது யாரோ இல்லை என் பேரன் தான் என்று பதிலடி கொடுக்க அத்துடன் எபிசோடு முடிவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment