கோபியின் வில்லத்தனம்: உண்மையை உடைத்த எழில்; ராதிகா கொடுத்த ரியாக்ஷன்!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Baakiyalaks124

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், கோபி பாக்யாவிடம் இருந்து தனது பிளன்ளைகளை பிரிக்க, சதித்திட்டம் தீட்டி அரங்கேற்றி வருவதால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisment

இன்றைய எபிசோட்டின தொடக்கத்தில், எழில் பங்ஷனை முடித்துவிட்டு, செழியன், ஜெனி, இனியா ஆகியோர் காரில் வந்துகொண்டிருக்கும்போது, இனியாவும் செழியனும், பாக்யா இந்த நிகழ்ச்சிக்கு வராது குறித்து தவறாக பேசுகின்றன. இதற்கு ஜெனி ஆண்டி வேண்டுமென்றே வராமல் இருந்திருக்க மாட்டார். எதாவது முக்கியமான வேலையாக இருக்கும் என்று சொல்ல, அம்மா இப்போ நம்மல பற்றி யோசிக்கிறதே இல்லை. ரெஸ்டாரண்ட் பற்றிதான் நினைப்பதாக இனியா சொல்கிறாள்.

எல்லார் வீட்டிலும் அப்பா, வீட்டுக்கு தேவையானதை செய்கிறார். அம்மா பிள்ளைகளை பார்த்துக்கொள்கிறார். ஆனால் நம்ம வீட்டில் அப்படி இல்லையே என்று ஜெனி சொல்ல, அதற்கு செழியன், இன்றைக்கு எழிலுக்கு பெரிய பங்ஷன் இதற்கு அம்மா வந்திருக்க வேண்டும் என்று சொல்ல, ஜெனி பாக்யாவுக்கு போன் செய்து கேட்பதாக சொல்லி போன் செல்ல, பாக்யா போனை எடுக்கவில்லை. அப்போதும் ஆண்டி எதாவது முக்கியமான வேலையாக இருப்பார் என்று ஜெனி சப்போர்ட் செய்கிறாள்.

அடுத்து அழுதுகொண்டே வரும் எழில், அமிர்தாவிடம் சென்று, அம்மாவை நான் தான் இந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டாம் என்று சொன்னேன். என் அப்பாவும் இந்த தயாரிப்பாளரும் செய்த சதியில் மாட்டிக்கொண்டேன் என்று சொல்ல, நீங்க இது பற்ற உங்க அம்மாவிடம் சொல்லிவிடுங்கள் என்று அமிர்தா சொல்கிறாள். இந்த பக்கம் தான் வெற்றி பெற்றுவிட்டதாக கோபி புலம்பிக்கொண்டிருக்க, இங்கு வரும் ராதிகா இப்போது உங்களை பார்க்க சந்தோஷமாக இருக்கிறது.

Advertisment
Advertisements

எழில் தனது படத்திற்கு பாக்கியலட்சுமி பெயர் வைத்தது உங்களுக்கு முன்பே தெரியுமா என்று கேட்க, எனக்கு தெரியாது. தெரிந்திருந்தால் வைக்க விட்டிருக்கவே மாட்டேன். இந்த டைட்டிலையும் என் ப்ரண்டிடம் சொல்லி மாற்றிவிட சொல்வேன். பாக்யாழவ இந்த பங்ஷனுக்கு வர விடாமல் தடுத்ததே நான் தான் என்று சொல்ல, நீங்க ரொம்ப வில்லத்தனமா இருக்கீங்க, என்று சொல்ல, என் ப்ரண்டுக்கு சப்போர்ட் பண்றீயா என்று கோபி கேட்க, ராதிகா அங்கிருந்து சென்றுவிடுகிறாள்.

அடுத்து பலகாரம் எல்லாம் தயாராகிக்கொண்டு இருக்க, பாக்யா வேலை செய்வதை பார்த்து ஈஸ்வரி சோகமாக பார்க்கிறாள் அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: