பாக்யா பக்கம் சாய்ந்த ராதிகா: ஒற்றை கேள்வியால் அதிர்ந்த கோபி; உண்மை வெளி வருமா?

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யா பக்கம் சாய்ந்த ராதிகா கோபியை மடக்கி கேள்வி கேட்கிறாள்.

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யா பக்கம் சாய்ந்த ராதிகா கோபியை மடக்கி கேள்வி கேட்கிறாள்.

author-image
WebDesk
New Update
radhika Gopi baakiya

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தாலும், அவ்வப்போது பாக்யா கேரக்டரின் செயலால் கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது, பாக்யாவின் ரெஸ்டாரண்டில், கோபி பார்த்த வேலையால், ரெஸ்டாரண்ட் தற்போது சீல் வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

Advertisment

ரெஸ்டாரண்டில் உணவு சரியில்லலை என்று கம்ளைண்ட் வந்ததை தொடர்ந்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், சோதனை மேற்கொண்டு நிலையில், பிரியாணியை தவிர மற்ற அனைத்து உணவும் சரியாக இருக்கிறது என்று சொல்கின்றனர். ஆனால் கெட்டுப்போன இறைச்சி வைத்து சமைத்த காரணத்திற்காக ரூ50 ஆயிரம் அபராதத்துடன் 3 நாட்கள் ரெஸ்டாரண்ட்க்கு சீல் வைக்கப்படும் என்று அதிகரிகள் சொல்ல, இப்போது நீங்கள் சீல் வைத்தால் நாங்கள் தவறு செய்தமாதிரி ஆகிவிடும் என்று பாக்யா கெஞ்சுகிறாள்.

இதை கேட்காத அதிகாரிகள் இப்போது ரெஸ்டாரண்ட்க்கு எதுவும் செய்யாமல் போனால் நாங்கள் தவறு செய்தமாதிரி ஆகிவிடும் என்று கூறி ரெஸ்டாரண்ட்க்கு சீல் வைக்கின்றனர். இதனால் கலங்கும் பாக்யா, மகன்களிடம் அழுது புலம்ப, இந்த பிரியாணியை நான் சாப்பிட்டால் நம்புவார்களா என்று அதை சாப்பிட செல்கிறாள். அதன்பிறகு செழியன் பாக்யாவை வீட்டுக்கு அழைத்து செல்ல, ஈஸ்வரி என்னால் தான் இப்படி ஆனது. நான் தொடங்கி வைத்தால் விளங்காது பாக்யா என்னை மன்னித்துவிடு என்று சொல்ல, அவரை சமாதாப்படுத்துகிறாள்.

இந்த செய்தியை கேட்டு சந்தோஷப்படும் கோபி, டிவியில் அந்த செய்தியை பார்த்து சிரித்துக்கொண்டிருக்கிறான். அப்போது அங்கு ராதிகாவும் அவளது அம்மாவும் வர, இந்த செய்தியை கேட்டு, ராதிகா அம்மா கமலா மகிழ்ச்சியடைகிறாள். ஆனால் பாக்யா அப்படிப்பட்ட ஆள் கிடையாது. அவங்க நல்ல சாப்பாடு தான் கொடுப்பாங்க என்று சொல்லும் ராதிகா, பாக்யா ரெஸ்டாரண்டில் நடக்கும் விஷயத்திற்கும் உங்களுக்கும் எதாவது சம்பந்தம் இருக்கிறதா என்று கேட்க, கோபி ஷாக் ஆகிறான்.

Advertisment
Advertisements

ஆனாலும் சமாளித்துக்கொண்டு அவளுக்கு இப்படி ஆக வேண்டும் என்று நினைத்தது உண்மைதான் ஆனால் இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்கிறான். இதை கேட்ட ராதிகாவின் அம்மாவும் இந்த நேரத்தில் நீ மாப்பிள்ளை பக்கம் தான் நிற்க வேண்டும் என்று சொல்கிறாள். அதன்பிறகு வீட்டில் அழுதுகொண்டே இருந்தால் ஒன்றும் நடக்காது என்று நினைத்து பிரியாணி ஆர்டர் தொடர்பான கணக்குகளை பார்க்கும் பாக்யாவுக்கு, கையில் இருக்கும் பணம் போக பல லட்சம் ஆர்டர் செய்தவர்களுக்கு தரவேண்டி இருக்கிறது. இதனால் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Tamil Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: