/indian-express-tamil/media/media_files/OcnHmeLgarg0b2C4MQyK.jpg)
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், சீரியலின் தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில், பாக்யாவுக்கு எதிரான கோபி புதிய பிஸினஸ் தொடங்கியுள்ளார்.
பாக்யலட்சுமி சீரியலில், பாக்யாவின் வளர்ச்சி பிடிக்காத கோபி, அமைச்சரின் உதவியாளரை வைத்து பாக்யா ரெஸ்டாரண்ட் திறப்பு விழாவுக்கு அமைச்சர் வரமுடியாதபடி செய்துவிட முயற்சி செய்தார். ஆனாலும் அவனது முயற்சி பலிக்காமல், பாக்யா எதிர்பார்தது போல், அமைச்சர் வந்து ரெஸ்டாரண்டடை திறந்து வைத்துவிட்டார், இதனால் கோபி நோஸ்கட் ஆகிய நிலையில், ரெஸ்டாரண்ட் திறப்பு விழாவுக்கு போனதற்காக ராதிகாவிடமும் பலமாக வாங்கி கட்டிக்கொண்டார்.
இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், தற்போது புதிய ப்ரமோ வெளியாகியுள்ளது. இதில், கோபி தனது அம்மாவிடம் தான் புதிய பிஸினஸ் தொடங்க உள்ளதாக கூறி, ஈஸ்வரி கிச்சன்ஸ் என்ற புதிய ரெஸ்டாரண்டடை தொடங்குகிறார், இப்போ என்ன நீங்கள் சமையல் பக்கம், எங்க அம்மாவுக்கு போட்டியா என்று எழில் கேட்க, நான் உங்க அம்மாவ ஒரு ஆளாவே நினைக்கிறது இல்ல அப்புறம் எப்படி போட்டி என்று கோபி ஏளனம் பேசுகிறான்.
அதனைத் தொடர்ந்து ஈஸ்வரியை வைத்து ரெஸ்டாரண்டை கோபி ஓபன் செய்ய, கூட்டம் குவிய தொடங்குகிறது. இந்த பக்கம் பாக்யா தனது ரெஸ்டாரண்டில், செய்து வைத்தது அனைத்தும் அப்படியே இருக்கிறதே என்று வருத்தப்பட, ஈஸ்வரி முதல் நாளே வியாபாரம் நல்ல இருக்கு என்று கோபி ரெஸ்டாரண்ட் குறித்து புகழ்ந்து பேசுகிறார். அத்துடன் இந்த ப்ரமோ முடிவடைகிறது.
ஏற்கனவே செழியனின் டைவர்ஸ் விவகாரம் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது பாக்யாவின் ரெஸ்டராண்ட்க்கு கோபி புது ரூட்டில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.