கோபி, ஈஸ்வரிக்கு ஷாக் கொடுத்த ராதிகா... பாக்யாவுக்கு ஒரு கோரிக்கை

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்

author-image
WebDesk
New Update
Gopy Radhika Baakiyal.

பாக்கியலட்சுமி சீரியல்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற வரும் நிலையில், நாளுக்கு நாள் பரபரப்பின் உச்சமாக சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

Advertisment

இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், ராதிகா ரூமில் இருக்கிறார். அப்போது அங்கு வரும் கோபி என்ன நீ அவளை கேள்வி கேட்பேனு பார்த்தா நீ என்ன டேமேஜ் பண்ணிட்ட என்று கேட்க, உங்க முன்னாள் மனைவி என்ன பண்றாங்க எங்க போறாங்க யார்ட பேசுறாங்கனு பாக்குறது தான் உங்க வேலையா? நீங்க பாக்குரதுதான அதுல நான் என்ன பண்றது உங்க புருஷன் ஏன் என்ட கேள்வி கேட்கிறார் என்று பாக்யா கேட்ட நான் என்ன செய்யுறது என்று ராதிகா கேட்கிறார்.

அப்போது அங்கு வரும் ஈஸ்வரி, என்ன நீ இப்படியெல்லாம் பேசுற, தாலி கட்டுன புருஷன இப்படித்தான பேசுவியா என்று கேட்க, அப்போ நான் தான் இவர் தாலி கட்டிய மனைவினு ஒத்துக்கிறீங்களா என்று கேட்க ஈஸ்வரி அதிர்ச்சியாகிறார். உங்க பையன் தேவையில்லாதது எல்லாம் பேசுவாறு நான் அதற்கு சப்போர்ட் பண்ணணுமா? தேவையில்லாம அவர் வேலையை மட்டும் பார்க்க சொல்லுங்க என்று சொல்கிறார் ராதிகா. இதை கேட்டு ஈஸ்வரி வாயடைத்து போகிறார்.

அடுத்து பாக்யா, பேசிக்கொண்டிருக்கும்போது எவ்வளவு தான் பொறுமையாக இருக்கிறது அதான் அவரை வீட்டை விட்டு போக சொன்னேன் என்று சொல்கிறார். அதற்கு அமிர்தா நல்லவேளை அங்கிள் ராதிகாவை கல்யாணம் பண்ணாரு எப்படி பேசுனாங்க பார்த்தீங்களா என்று கேட்க, இவங்கதான் கேண்டீனுக்கு வர கூடாதுனு சொன்னாங்க. ஆனா இப்போ அவங்களே அம்மாவுக்கு சப்போர்ட் பண்றாங்க என்று எழில் சொல்கிறான்.

Advertisment
Advertisements

அதன்பிறகு கோபி இனியாவிடம் பேச முயற்சிக்க, இனியா நீ எனக்கு ஏன் சப்போர்ட் பண்ணல என்று கேட்க, நீங்க நல்ல அப்பாதான் ஆனா நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கிட்டு போனதுக்கு அப்புறம் அம்மாதான் எல்லாத்தையும் தனி ஆளாக இருந்து பார்த்துக்கிட்டாங்க. நீங்க அவங்கள பத்தி பேசுரது தப்பு என்று சொல்லிவிட்டு கிளம்புகிறாள். அதன்பிறகு கிச்சனுக்கு வரும் பாக்யாவிடம், ராதிகா நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாமே எத்தனை நாளைக்குததான் தனியா இருப்பீங்க என்று கேட்கிறாள்.

நீங்க பழனிச்சாமி கூட நல்லா பேசுறீங்க அவரையே கல்யாணம் பண்ணிக்கலாமே என்று சொல்ல, கல்யாணம் பண்ணவங்க எல்லாரும் சந்தோஷமாவா இருக்காங்க, நான் மட்டுமல்ல யாருமே சந்தோஷமா இல்ல என்று செல்வி சொல்ல, நீங்க கல்யாணம் பண்ணி சந்தோஷமாக இருக்கீங்களா என்று ராதிகாவிடமே கேட்கிறார் பாக்யா. இதனால் அதிர்ச்சியான ராதிகா பாக்யாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு புறப்படுகிறாள். அதன்பிறகு ராதிகா தன்னோடு சேர்த்துவிட்டார் என்று பாக்யா ஈஸ்வரியிடம் சொல்ல அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: