கோபிக்கு விழுந்த செம அடி : ராதிகா இப்படி பண்ணிட்டாரே... இனியா ஷாக்

பாக்யாவிடம் பேசக்கூடாது என்று மயூவிடம் ராதிகா சொல்லியும், பாக்யா செய்யும் செயல்களை பார்த்து மயூ பாக்யாவை பாராட்டுகிறார்.

பாக்யாவிடம் பேசக்கூடாது என்று மயூவிடம் ராதிகா சொல்லியும், பாக்யா செய்யும் செயல்களை பார்த்து மயூ பாக்யாவை பாராட்டுகிறார்.

author-image
WebDesk
New Update
Baakiyalakshmi

பாக்கியலட்சுமி சீரியல்

கோபி இனியாவுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பதை பொருத்துக்கொள்ள முடியாத ராதிகா இனியா முன்னாடியே கோபியை அடித்துவிடுகிறார். இதை சற்றும் எதிர்பாராத கோபி ஷாக் ஆகிறார்.

Advertisment

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இல்லத்தரசியின் வாழ்க்கை போராட்டம், திருமணத்திற்கு மீறிய உறவு உள்ளிட்ட பல விவகாரங்களை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் தற்போது பரபரப்பான க்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இதனிடையே பாக்கியலட்சுமி சீரியலின் அடுத்த ப்ரமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் கோபி மயூவுக்கு பாடம் செல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கிறார். அப்போது இனியா தனக்கும் பாடத்தில் டவுட்.என்று சொல்லி கோபியின் ரூமுக்கு வருகிறாள். வழக்கம்போல் இனியா பக்கம் பேசுவதா அல்லது ராதிகா பக்கம் பேசுவதா என குழப்பத்தில் இனியாவுக்கு பாடம் சொல்லிக்கொடுகிகிறார்.

அப்போது அங்கே வரும் ராதிகா நாங்கள் தூங்க வேண்டும் என்று சொல்ல இங்க இடம் இருக்கிறது தூங்குங்க என்று கோபி வெகுளியாக சொல்கிறார். இதை கேட்டு கடுப்பாகும் ராதிகா லைட் எரியும்போது எப்படி தூங்க முடியும் என்று கேட்க இனியாவுக்கு முக்கியமான படம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். அதனால் நீங்கள் கண்னை மூடிக்கொண்டு துங்குங்க லைட் ஆப் பண்ண முடியாது என்று கோபி சொல்ல இனியா நக்கலாக சிரிக்கிறார்.

Advertisment
Advertisements

இனியாவை பார்த்து கோபப்படும் ராதிகா தூங்குவது போல் நடித்து கோபியின் தொடையில் வேகமாக அடித்துவிடுகிறார். இதை சற்றும் எதிர்பாராத கோபி ஷாக் ஆக வலியால் அலறவும் முடியாமல், வெளியில் சொல்லலும் முடியாமல் தவிக்கிறார். என்ன எதுக்கு அடிச்ச என்று கோபி கேட்க அப்போது ராதிகா தெரியாமல் கை பட்டுவிட்டது என்று சொல்ல நம்ம மேல இருக்க கோபத்தில் தான் ராதிகா இப்படி செய்கிறார் என்ற உண்மையை கோபி புரிந்துகொள்கிறார். ஆனாலும் இனி என்ன செய்ய முடியும் என்று புலம்புகிறார்.

அதே நேரத்தில் பாக்யாவிடம் பேசக்கூடாது என்று மயூவிடம் ராதிகா சொல்லியும், பாக்யா செய்யும் செயல்களை பார்த்து மயூ பாக்யாவை பாராட்டுகிறார். ராதிகா வீட்டில் இல்லாத நேரத்தில் மயூவுக்கு சாப்பாடு கொடுக்கும் பாக்யா அவருக்கு தேவையான அனைத்தையும் செய்வதால் மயூ பாக்யா பக்கம் திரும்பி விடுகிறார் இதனால் அடுத்து ராதிகாவின் நிலைமை என்ன என்பது குறித:து பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: