யார் உங்கள் மனைவி? போலீஸ் கேள்வியால் அதிர்ந்த கோபி.... பரபரப்பாகும் பாக்கியலட்சுமி

மாமியார், முதல் மனைவி என எல்லாம் சேர்ந்து என் பொண்ணை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிவிட்டார்கள் என ராதிகாவின் அம்மா சொல்கிறார்

author-image
WebDesk
New Update
Baakiyalalshmi

ராதிகா - பாக்யா - கோபி

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பான திருப்பங்களுடன் அரங்கேறி வரும் நிலையில், ராதிகாவை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய ஈஸ்வரிக்கு ஷாக் கொடுக்கும் விதமாக ராதிகாவின் அம்மா போலீசுடன் வந்திருக்கிறார்.

Advertisment

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், சண்டை பெரிதானதால் ஈஸ்வரி ராதிகாவின் கழுத்தை பிடித்து வெளியே தள்ளிவிடுகிறார். தெருவில் இருப்பவர்கள் இதை பார்த்துவிட, ராதிகா கோபிக்கு போன் செய்து உடனடியாக வீட்டுக்கு வரும்படி சொல்கிறார். அதே நேரத்தில் வீட்டில் இருப்பவர்கள் ஈஸ்வரி செய்தது தப்பு என்று சொன்னாலும் இன்னைக்கு எனக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகனும் என்று ஈஸ்வரி தனது முடிவில் உறுதியாக இருக்கிறார்.

இந்த நேரத்தில் கடைக்கு சென்று வரும் ராதிகாவின் அம்மா ராதிகாவை பார்த்து விடுகிறார். அப்போது அவர் என்ன நடந்தது என்று விசாரிக்க இது எல்லாத்துக்கும் நீதான் முக்கிய காரணம். நீதான என்ன இந்த வீட்டுக்கு போக சொன்ன என்று அம்மாவை கோப்பட்டு திட்டுகிறார் ராதிகா. இதை கேட்டு நீ கொஞ்சம் பொறுமையா இரு இதுக்கு என்ன பண்ணணும்னு எனக்கு தெரியும் என்று சொல்விட்டு செல்கிறார்.

அப்போது வீட்டுக்கு வரும் கோபியிடம் ராதிகா வீட்டில் நடந்ததை எவல்லாம் சொல்கிறார். உங்கள் அம்மாதான் என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பிட்டார் என்று சொல்ல அதிர்ச்சியாகும் கோபி வா என்னானு கேட்கிறேன் என்று சொல்லி உள்ளே அழைத்துச்செல்கிறான். இதை பார்த்த ஈஸ்வரி வெளியவே நில்லுடா என்று சொல்லிவிடுகிறார்.

Advertisment
Advertisements

அதன்பிறகு வாசலுக்கு வரும் ஈஸ்வரி இனி இந்த வீட்டில் இவ இருக்கனும் இல்லனா நான் இருக்கனும் என்று சொல்ல கோபி என்னமா இப்படி பெரிய வார்த்தையெல்லாம் பேசுறீங்க என்று கேட்க, இவ என்னலாம் பேசுனா தெரியுமா? என்னை வீட்டை விட்டு வெளியே போக சொல்றா என்று சொல்ல இதை கேட்டு கோபி யார் பக்கம் பேசுவது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்.

ஆனாலும் இங்க வந்ததில் இருந்து பிரச்னைதான் இருக்கு வா நம்ம வீட்டுக்கு போய்டலாம் என்று கோபி சொல்ல நீங்க எல்லாம் ஒரு மனுஷனா என்று கோபியை ராதிகா திட்டுகிறார். இதை கேட்ட ஈஸ்வரி இதுதான் புருஷனுக்கு கொடுக்கும் மரியாதையா இதுக்காகத்தால் இவள ஆசப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டியா என்று கேட்கிறார். இவர்கள் சண்டை மீண்டும் தொடங்க அப்போது ராதிகாவின் அம்மா அங்கு போலீசுடன் வருகிறார். மேலும் மாமியார், முதல் மனைவி என எல்லாம் சேர்ந்து என் பொண்ணை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிவிட்டார்கள் இவங்கள ஜெயில்ல பிடிச்சு போடுங்க என்று சொல்கிறார்.

இதற்கு ஈஸ்வரி பதில் சொல்ல ஈஸ்வரிக்கும் ராதிகாவின் அம்மாவுக்கும் சண்டை முற்றுகிறது. இதனால் கடுப்பான போலீஸ் இருவரையும் திட்டிவி்டு ஈஸ்வரியிடம் நீங்க எதுக்கு மருமகளை வீட்டை விட்டு வெளியே அனுப்புனீங்க என்று கேட்கிறார். அதற்கு ஈஸ்வரி யார் மருமகள், தெருவுல போற யாரோ என் வீட்டில் வந்து உட்கார்ந்துகிட்டு மருமகள் ஆகிடுவாங்களா?

எங்களுக்கு எப்பவும் பாக்கியா மட்டும் தான் மருமகள் என்று என்று சொல்ல, கோபமான போலீஸ் கோபியிடம் நீங்களே சொல்லுங்க உங்க மனைவி யார் என்று கேட்க  கோபி என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: