அம்மாவுடன் கூட்டு சேர்ந்த ராதிகா: ஈஸ்வரிக்கு எதிராக கடுமையாகும் வழக்கு; கோபி என்ன செய்வார்?

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்

author-image
WebDesk
New Update
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

பாக்யா -கமலா ராதிகா

பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், ஈஸ்வரியை தேடி வீட்டுக்கு வந்த போலீஸிடம் யார் கம்ளைண்ட் கொடுத்தது என்று கேட்க, கமலா தான் என்று சொல்கிறார்கள் போலீஸ் இதை கேட்ட, செல்வி, அது ராதிகாவின் அம்மா என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அதன்பிறகு ஈஸ்வரி வந்ததும் கூப்பிட்டுகிட்டு வாங்க. இல்லனா நாங்களே கைது பண்ண வேண்டி இருக்கும் என்று போலீஸ் சொல்லிவிட்டு செல்கின்றனர். 

Advertisment

அதன்பிறகு செல்வி ராதிகா கமலா இருவரையும் திட்டிக்கொண்டிருக்க, ஜெனி பாக்யாவிடம் சொல்ல வேண்டும் என்று சொல்கிறாள். அதற்கு செழியனும் ஓகே சொல்ல, எழில் அப்போது வேண்டாம் என்று சொல்கிறான். இப்போ சொல்லவில்லை என்றாலும் எப்படியும் அம்மாவுக்கு தெரியத்தான் போகிறது என்று கூறி சொல்ல முடிவு செய்கின்றனர். இங்கு ஈஸ்வரி ராமமூர்த்தி என அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து பாக்யா சந்தோஷப்படுகிறாள்.

அப்போது எழில் போன் செய்து விசாரிக்க, நீ இன்னும் கதை சொல்ல போகலையா என்று கேட்க, இங்கு ஒரு பிரச்னை என்று சொல்லி நடந்தை சொல்கின்றனர். இதை கேட்டு பாக்யா அதிர்ச்சியாக, ஈஸ்வரியும் ராமமூர்த்தியையும் பார்க்கிறாள். இப்படி சந்தோஷமாக இருப்பவர்களிடம் எப்படி இந்த விஷயத்தை சொல்வது என்று ஒன்றும் சொல்லாமல் இருந்துவிடுகிறாள். அடுத்து வெளியில் போன ராதிகா வீட்டுக்கு வந்தபோது, கோபி தன்னிடம் நடந்துகொண்டதையும், அதற்காக தான் கம்ளைண்ட் கொடுத்த விஷயத்தையும் சொல்ல ராதிகா அதிர்ச்சியாகிறாள். 

இப்போ எதுக்குமா இப்படி பண்ண என்று கேட்க, நீ சும்மா இரு நான் பண்ணது தான் சரி, அந்த பொம்பளை ஜெயிலுக்கு போனாதா மாப்பிளைக்கு புத்தி வரும் என்று சொல்லி ராதிகாவை சமாளிக்கிறாள். அதன்பிறகு சென்னைக்கு திரும்பும்போது. ஈஸ்வரி எனக்கு தூக்கம் வருகிறது என்று சொல்ல, பாக்யா அவரை படுக்க வைக்கிறார். ஆனால் மனதிற்குள் சென்னை போனவுடன் என்ன நடக்க போகிறதோ என்று நினைத்துக்கொண்டே வர அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: