/tamil-ie/media/media_files/uploads/2021/11/Bharathi-kannamma.jpg)
சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் சீரியல்களில் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு தனி இடம் உண்டு. விஜய் டிவியின் ப்ரைம்டைமில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஒரு பெண் தனிமையில் இருந்து தன்னை முன்னேற்றிக்கொள்வது எப்படி என்பதை தெளிவாக எடுத்துரைக்கும் வகையில் திரைக்கதை அமைச்சப்பட்டுள்ளது. அதிலும் இந்த சீரியலின் சமீபத்திய எபிசோடுகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பாப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா என்ற முதன்மை கதாப்பாத்திரதிதில் நடித்து வரும் ரோஷ்னி திடீரென சீரியலில் இருந்து விலகுவதாக கடந்த சில நாட்களளுக்கு முன்பு அறிவித்திருந்தார். இதனால் ரசிகர்கள் கடும் அதிலுருப்தியில் உள்ளன நிலையில், பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து ரோஷினி ஏன் விலக வேண்டும், கண்ணம்மாவாக அவரை தாண்டி யாரையும் நினைக்க முடியாது என ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.
இதனால் சீரியலில் கடந்த சில நாட்களாக தோய்வு ஏற்பட்டுள்ள நிலையில், கண்ணம்மா ரோலுக்கு அடுத்து யார் வருவார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. இந்நிலையில், தற்போது பாரதி கண்ணம்மா சீரியலின் அதிரடி புரொமோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் வெண்பா சட்டத்துக்கு எதிராக கரு கலைப்பு செய்து வருவதாக போலீசார் அவரை கைது செய்கின்றனர்.
இந்த செய்தியை கேள்விக்கப்பட்ட பாரதி அதிர்ச்சியடையும் நிலையில், வெண்பாவுக்கு இப்படி ஒரு செக் வைத்ததே கண்ணம்மா என்று, பிறகுதான் தெரியவருகிறது. இதனால் சீரியலில் அடுத்து என்ன திருப்பம் அரங்கேற போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இந்த புரொமோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.