பிறந்த நாள் கொண்டாட ஹேமா வீட்டிற்கு போகவா என லட்சுமி கேட்கும் கேட்க, நான் என்னான்னு சொல்றேன் என கண்ணம்மா சொல்கிறாள். அதன்பிறகு பள்ளிக்கு செல்லும், லட்சுமிக்கு, அங்கு வரும் பாரதி, ஹேமா இருவரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கின்றனர். அப்போது பாரதி, நம்ம நேரா வீட்டுக்கு போறோம், என்னோட வந்துரு நீ என வீட்டிற்கு அழைக்கிறான்.
ஆனா லட்சுமி, நான் அம்மாகிட்ட கேட்டேன் எதுவும் சொல்லலை. நான் இன்னொரு தடவ கேட்டு பார்க்குறேன் என சொல்கிறாள். ஆனால் நீ வரலைன்னா ஹேமா ரொம்ப வருத்தப்படுவா, நீ அம்மாகிட்ட கேட்டுப்பாரு என்று பாரதி செல்லிவிட்டு கிளம்புகிறான். அப்போது பாரதிக்கு போன் செய்யும் வெண்பா, நான் ஹாஸ்பிட்டல் வந்துட்டேன், சீக்கிரம் வா பாரதி என அழைக்கிறாள். அதனை கேட்டு பாரதியும் கிளம்புகிறான்.
இதற்கிடையே கண்ணம்மா வீட்டிற்கு வெளியே காரில் காத்திருக்கும், சௌந்தர்யா ஒரு காலத்துல நான் வெறுத்த ஒருத்திய பார்க்க காத்திருக்கிறேன். எப்படியாவது அவளை சமாதானம் பண்ணி, லட்சுமியாவது பர்த்டே பங்கஷனுக்கு கூட்டிட்டு போகணும் என மனதிற்குள் நினைத்து கொண்டிருக்க கண்ணம்மா வருகிறாள். அவளிடம் பாரதி இங்க வந்தானா என சௌந்தர்யா கேட்க, அவள் அமைதியாக இருக்கீறாள்.
அப்போது சௌந்தர்யா, இரத்த காயத்தோட வீட்டுக்கு வந்தான். கேட்டதுக்கு நரகத்துல இருந்து வந்தேன் சொன்னான். அதுல எனக்கு தெரிஞ்சது, அவன் உன்வீட்ல இருந்து வந்தான்னு. எதுக்கு வந்தான்னு நீயாவது சொல்லு கண்ணம்மா என கேட்கிறாள். அதற்கு அதைப்பற்றி பேசி என்னாக போகுது அத்தை என சொல்கிறாள். அப்போ நீயும் சொல்ல மாட்டா. சரி நான் காரணத்தை கேட்கலை.
நீ எதுக்கு அவன உள்ள விட்ட, அப்படியே வாசல்ல வச்சு வெளிய அனுப்பி இருக்கலாம்ல என சொல்கிறாள். அத்தை நீங்களா இப்படி பேசுறீங்க என கேட்க, பாரதி என்னோட பையன் தான். ஆனா அவன் உன்ன அடிக்கடி இப்படி அசிங்கப்படுத்துறது எனக்கு பிடிக்கலை. நீ இன்னும் அவன்கிட்ட கறார்ரா நடந்து இருக்கணும் என சொல்கிறாள். அதன்பிறகு கண்ணம்மாவிடம் இன்னைக்கு வீட்ல ஹேமா பர்த்டே பங்ஷன் இருக்கு. நீ கண்டிப்பா லட்சுமியை வீட்டுக்கு அனுப்பி வைக்கணும் என சொல்கிறாள்.
நான் எப்படி அத்தை லட்சுமியை அங்க அனுப்ப முடியும் என கண்ணம்மா கேட்கும் போது, என்னோட ரெண்டு பேத்திங்க பிறந்த நாளை ஒன்னா கொண்டாட ஆசைப்படுறேன். என்னோட ஆசைய நிறைவேற்ற மாட்டியா கண்ணம்மா என சௌந்தர்யா கேட்கிறாள். அதன்பிறகு கண்ணம்மா லட்சுமி என்னோட பொண்ணுன்னு எந்த காரணம் கொண்டும் பாரதிக்கு தெரியக்கூடாது என அவள் சொல்லும் போது, கண்டிப்பா அவனால எந்த பிரச்சனையும் வராது என சொல்கிறாள். அதனை தொடர்ந்து லட்சுமியை அனுப்பி வைக்க சம்மதம் தெரிவிக்கிறாள் இத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil