Vijay TV Serial : சாந்தியை வெளுத்து வாங்கும் கண்ணம்மா ... பாவம் பாரதிகிட்ட மாட்டிகிட்டாரே...

Tamil Serial Bharathi Kannamma : பாரதி கணணம்மா சீரியலில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போமா

Tamil Serial Bharathi Kannamma : பாரதி கணணம்மா சீரியலில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போமா

author-image
WebDesk
New Update
Vijay TV Serial : சாந்தியை வெளுத்து வாங்கும் கண்ணம்மா ... பாவம் பாரதிகிட்ட மாட்டிகிட்டாரே...

ஹேமா லட்சுமி இருவரும் பிறந்த நாள் கேக் ஊட்டிக்கொள்வதை பார்த்து சந்தோஷப்படும் கண்ணம்மா, கல்யாணத்திற்கு பிறகு பாரதி தனது முதல் பிறந்தநாளை  கொண்டாடியதை நினைத்து பார்க்கிறாள். அதன்பிறகு யோசிக்கும் கண்ணம்மா, எல்லாம் நல்லபடியா நடக்கும் போது, சாந்தி எதுக்கு போன் பண்ண. வெண்பா சொல்லி தான் இப்படி பண்ணிருப்பா. என்னை வர வைச்சு, லட்சுமி என்னோட பொண்ணுன்னு காட்ட பண்ணிருக்கா என யோசிக்கிறாள்.

அதன்பிறகு ஹேமாவோட இந்த பர்த்தேட ரொம்ப ஸ்பெஷல் என வேணு சொல்லும்போது, அஞ்சலி பாரதியிடம் ரெண்டு பர்த்டே பேபிக்கு என்னா விஷ் பண்ணுவீங்க என கேட்கிறாள். அப்போது ஹேமாக்கும் கொஞ்சம் தைரியமும், லட்சுமிக்கு கொஞ்சம் பொறுமையும் இருந்தா போதும் என பாரதி சொல்லும்போது, அப்போர் ஹேமாவுல பாதி லட்சுமியும், லட்சுமில பாதி ஹேமாவும் அப்படித்தானே என வேணு கேட்கிறான். இதையெல்லாம் பார்த்து சந்தோஷப்படும் கண்ணம்மா வீட்டிற்கு கிளம்பும்போது, லட்சுமி அவளை பார்த்துவிடுகிறாள்.

Advertisment

அம்மாவை பார்த்த சந்தோஷத்தில் கேக் கொண்டு வரும் லட்சுமியிடம், ஏன் உள்ளே வந்துருக்கலாம்ல அம்மா என கேட்கிறாள். அதனை தொடர்ந்து லட்சுமி கண்ணம்மாவிற்கு கேக் ஊட்டி விட்டு கிளம்புகிறாள். அப்போது அங்கு வரும் வேணு, அப்போது அவளிடம் வந்து, நான் பாரதியை ஏதாவது சொல்லி வெளியே அனுப்புறேன். நீ உள்ள வாம்மா என சொல்கிறான். ஆனால் அவள் மறுத்துவிட பாரதி போன் பேசி கொண்டே வெளியே வருகிறான். அவனைப் பார்த்த்தும் கண்ணம்மா ஒளிந்துகொள்கிறாள்.

அதன்பிறகு பாரதி உள்ளே சென்றவுடன், கண்ணம்மா கிளம்புகிறாள். அப்போது, தனதுநண்பர்களை அனுப்ப ஹேமாவின் பாரதியும் கிழே வருகின்றனர். அப்போது அங்கே நிற்கும் கண்ணம்மாவை பார்க்கும் ஹேமா அப்பா சமையல் அம்மா வந்து இருக்காங்க என சொல்லி, அவளை அழைக்கிறாள். அப்போது பாரதி ஆர்வமுடன் பார்க்கும்போது, அங்கு கண்ணம்மா வெளியில் வருகிறாள். அவளை பார்த்ததும் கடுப்பாகும், பாரதி உடனடியாக உள்ளே சென்றுவிடுகிறான்.

அப்போது ஹேமாவிடம். நான் உனக்கு பர்த்டே விஷ் பண்ணதான் வர சொன்னேன், அவளை உள்ளே கூப்பிட, நம்ம ஸ்கூல்ல பார்க்கலாம் என சொல்லி அவளை அனுப்பி வைக்கிறான். இதையெல்லாம் ஜன்னல் வழியாப பார்த்துக்கொண்டிருக்கும் துர்கா, குழப்பமான நிலையில், வெளியே வந்து எல்லாத்தையும் கண்டுபிடிச்சு, வெண்பாவுக்கு முடிவு கட்டனும் என மனதிற்குள் நினைக்கிறான்

Advertisment
Advertisements

இதனிடையில் பர்த்டே பங்ஷனை நினைத்து கடுப்பாகும் வெண்பா, இங்க நடக்குற எல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்கலை. நீ போய் அந்த கண்ணம்மா வர்றாளா பாரு, இல்லன்னா திரும்பவும் போன் போடுவோம் என சாந்தியிடம் சொல்கிறாள். அப்போது மறைந்திருக்கும் கண்ணம்மா, வெளியில் வரும் சாந்தியின் முகத்தை மூடி அடிவெளுத்துக்கட்ட அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bharathi Kannamma Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: