Advertisment

Vijay TV Serial: அம்மாவையே சந்தேகப்படும் பாரதி; சட்டையைப் பிடித்த அகில்

Tamil Serial Update : விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் காணலாம்

author-image
WebDesk
New Update
Vijay TV Serial: அம்மாவையே சந்தேகப்படும் பாரதி; சட்டையைப் பிடித்த அகில்

Tamil Serial Bharathi Kannamma Update : வெண்பா காணாமல் போன விரக்தியில் இருக்கும் சாந்தி, வெண்பாவின் செல்போன் எண்ணிற்கு முயற்சி செய்துகொண்டிருக்கிறாள். ஆனா அவள் போன் எடுக்காததால், பாரதிகிட்டயோ நேர கேட்டுவோம்னு யோசிக்கிறாள். அடுத்து துர்கா செல்லிட்டு போன படி வெண்பாவுக்கு சாப்பாடு கொடுக்க வில்லை. இதனால் பசியால் துடிக்கும் அவர், சாப்பாடு கேட்டு கத்திக்கொண்டிருக்கிறாள் ஆனால் அவளை யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரத்தின் உச்சத்திற்கு செல்லும் வெண்பா, அடுத்து என்ன பண்றது என யோசிக்கிறாள்.

Advertisment

அப்போது வெளியில் யாராவது இருக்கிறார்களானும் பார்போம் என்று ஜன்னல் வழியாக எட்டிப்பார்கிறாள். அப்போது அங்கே பாரதி நின்றுகொண்டிருக்கிறான். இதனால் மகிழ்ச்சியில் வெண்பா பாரதி பெயரை சொல்லி கத்துகிறாள். ஆனால் அவளது கத்தலுக்கு, பயனில்லாத வகையில், சாந்தி பாரதியிடம் பேச தொடங்குகிறாள். அதற்கு பாரதி நானும் ஹாஸ்பிட்டல் போய் பார்த்தேன், அங்க லீவுன்னு எழுதி போட்ருக்கு, எனக்கும் எதுவும் புரியல என சாந்தியிடம் சொல்கிறான்.

அதன்பிறகு எனக்கு ரொம்ப பயமா இருக்கு சார். ஆக்ஸிடன்ட் ஏதாவது ஆகிருந்தா என சாந்தி சொல்ல, அதெல்லாம் எதுவும் ஆகி இருக்காது. நான் விசாரிச்சு சொல்றேன் என சொல்லி சாந்தியை அனுப்பி வைக்கிறான் பாரதி. இதற்கிடையே சௌந்தர்யா, அகிலிடம், வெண்பா இல்லாத இந்த ஒரு மாசத்தை பயன்படுத்தி பாரதியையும், வெண்பாவையும் சேர்த்து வைப்போமா? என கேட்கிறாள் அந்த நேரத்தில் அங்கு வரும் பாரதி, வெண்பா எங்க? அவளை என்ன பண்ணிங்க என கேட்க, வெண்பா எங்கன்னு எங்ககிட்ட கேட்ட எங்களுக்கு என்ன தெரியும் என அகில் பதில் சொல்கிறான்.

ஆனால் அதை கேட்காத பாரதி, நான் அவளை கல்யாணம் பண்றேன் சொன்னதுல இருந்து காணோம். அவளை எங்க வச்சு இருக்கீங்க என கேட்டு கத்துகிறான் அப்போது அவன் சட்டையை பிடித்து யார பார்த்து என்ன வார்த்தை கேட்குற என கத்துகிறான் அகில். இருவருக்கும் இடையில மோதல் உருவாகும்போது, குறுக்கிடும் சௌந்தர்யா, நேரா போய் போலிஸ்கிட்ட கம்பெளயிண்ட் கொடு, அவுங்க வந்து விசாரிச்சு உண்மையை கண்டு பிடிக்கட்டும் என சொல்கிறாள். இதை கேட்டு சமாதானமாகும் பாரதி அதெல்லாம் இல்லம்மா, என் மனசுல ஒரு சந்தேகம் தோணுச்சு அதன் உங்ககிட்ட மறைக்காம கேட்டேன். அது தப்பா என கேட்கிறான்.  அதுக்கு முன்னாடி அம்மா இந்த மாதிரி பன்னிருப்பாங்களான்னு யோசிச்சு இருக்கணும் என அகில் சொல்கிறான்.

இப்படிதான் கண்ணம்மா அண்ணிய சந்தேகப்பட்ட, இப்ப அம்மாவை சந்தேகப்படுற. உன் சந்தேக புத்திக்கு அளவு இல்லாம போயிட்டு இருக்கு என சொல்ல, ஏன் நான் எது பேசுனாலும் இங்கையே வந்து முடிச்சு போடுறீங்க என பாரதி கேட்கிறான். நீ சறுக்குன மொத இடம் அது தானடா என சௌந்தர்யா குத்திகாட்டுகிறாள். இதனால் ஆத்திரமடையும் பாரதி இப்பவும் சொல்றேன் கண்ணம்மா கிட்ட ஏதாவது உண்மைய சொன்னீங்க அடுத்த நிமிஷம் வெண்பாவை கல்யாணம் பண்ணி உங்க முன்னாடி வந்து நிற்பேன் என சொல்கிறான்.

இதை கேட்டு சௌந்தர்யா, உன்னால முடிஞ்சா பண்ணுடா. சவால் விடுறேண்டா உன்கிட்ட, அவளை நீ கல்யாணம் பண்ண, துப்பாக்கி எடுத்து அவளை கொல்ல கூட தயங்க மாட்டேன் என கோபமாக சொல்லிவிட்டு செல்கிறாள். இதற்கிடையில் பள்ளியில் பேரண்ட்ஸ் மீட்டிங்கிற்கு லட்சுமி, கண்ணம்மாவை அழைக்கிறாள். ஆனால் 'நான் வந்தா உன்னோட அம்மா சமையல்காரின்னு எல்லாருக்கும் தெரிஞ்சுரும்ல' என கண்ணம்மா சொல்ல லட்சுமி சோகமாகிறாள்.

இதற்கிடையில் பாரதியுடன் விளையாடி கொண்டிருக்கும் ஹேமா, சௌந்தர்யாவிடம் அப்பாவை மன்னிச்சுருங்க பாட்டி, பாவம்ல என சொல்கிறாள். அதன்பிறகு இருவரும் சமாதானம் ஆகின்றனர். அதோடு முடிகிறது இன்றைய எபிசோடு

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bharathi Kannamma Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment