Vijay TV Serial : லக்ஷ்மியை ஹாஸ்பிடலுக்கு கூட்டிச்செல்லும் பாரதி... கண்ணம்மா குழந்தைனு தெரியவருமா?

Tamil Serial Update : பாரதி கண்ணம்மா சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.

Tamil Serial Update : பாரதி கண்ணம்மா சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.

author-image
WebDesk
New Update
Vijay TV Serial : லக்ஷ்மியை ஹாஸ்பிடலுக்கு கூட்டிச்செல்லும் பாரதி... கண்ணம்மா குழந்தைனு தெரியவருமா?

Bharathi Kannamma Tamil Serial Episode : இரவு முழுவதும் கண்ணம்மா வீட்டில் தங்கிய பாரதி மறுநாள் தனது வீட்டிற்கு கிளம்பும்போது, கொரோனா டெஸ்டின் முடிவு வருகிறது. இதில் 4 பேருக்கும் நெகட்டீவ் என்று வந்ததால், பாரதி நிம்மதியடைகிறான். இதனிடையே பாரதி கண்ணம்மாவின் வீட்டில் தங்கியது குறித்து மகிழ்ச்சியாக பேசும் சௌந்தர்யா இரவு முழுவதும் நிம்மதியாக தூங்கியதாக தனது கணவரிடம் சொல்கிறாள்.

Advertisment

அதன்பிறகு இரவு முழுவதும் அவன் வரவில்லை. இப்போ இவ்வளவு நேரம் ஆகியும் வரவே இல்லையே கேட்டுவிட்டு இது குறித்து  கண்ணம்மாவிடமே கேட்போம் என கூறி அவருக்கு போன் செய்கிறார். அப்போது போனை எடுக்கும் கண்ணம்மா, பாரதி கிளம்பிவிட்டதாக கூறுகிறாள். அதன்பிறகு பாரதி பிரச்சினை செய்தானான என்று கேட்க இல்லை என்று கண்ணம்மா சொல்கிறாள்.

அதன்பிறகு பாரதிக்கு துணி எடுத்து கொடுத்தது மற்றும் குழந்தைகளுடன் விளையாடியது குறித்து கண்ணம்மா சொல்ல, சௌந்தர்யா அவளை கிண்டல் செய்கிறாள். அந்த நேரத்தில் பாரதி வீட்டிற்கு வருகிறான். அவனை அழைக்கும் சௌந்தர்யா, நைட் புல்லா எங்கடா போன என்றுகேட்க, பதில் சொல்ல தயங்கும் பாதி, ப்ரண்டு வீட்டில் இருந்த்தாக சொல்கிறான். ஆனால் இதை நம்பாக சௌந்தர்யா மீண்டும் கேட்க, ஆம் கண்ணம்மா வீட்டில் தான் இருந்தேன், அவள் தோசை சுட்டு கொடுத்தாள், இந்த லுங்கி டிசர்ட்டை வாங்கி கொடுத்தாள் என காட்டுகிறார்.

இதை பார்த்த சௌந்தயார் 'என்னப்பா ஒரே லுங்கி டான்சா' என கிண்டல் செய்கிறார். இதற்கிடையே கண்ணம்மா மீது கோபத்தில் உள்ள வெண்பா தனது வீட்டு வேலைக்காரியை சேரில் கட்டிவைத்து கண்ணம்மா என சொல்லி அடிக்கிறார். அதன் பின் இறுதியில் தான் அவரே சுய நினைவுக்கு வந்து உன்னை யார் கட்டி வைத்தது என சொல்லி அவரை விடுவிக்கிறார்.

Advertisment
Advertisements

இதனைத் தொடர்ந்து பள்ளிக்கு செல்லும் பாரதி அமெரிக்கா செல்ல இருந்த முடிவை கைவிட்டுவிட்டதாகவும் மீண்டும் ஹேமாவை பள்ளியில் சேர்க்க இருப்பதாக கூறுகிறார். அப்போது பள்ளியில் லட்சுமி வயிற்று வலியுடன் அழுதுகொண்டே நின்றுகொண்டிருக்கிறார். அவரை பார்த்து பாரதி ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்கிறார். அதன் பின் அவரது பெற்றோருக்கு தகவல் சொல்ல வேண்டுமே என நினைத்து கண்ணம்மாவுக்கு பேச நினைக்கிறான். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bharathi Kannamma Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: