Vijay TV Serial : இரட்டைக் குழந்தை... உண்மை தெரிந்த கண்ணம்மா... உடனே போட்டார் போன்!

Tamil Serial Update : பாரதி கண்ணம்மா சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்

Tamil Serial Update : பாரதி கண்ணம்மா சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்

author-image
WebDesk
New Update
Vijay TV Serial : இரட்டைக் குழந்தை... உண்மை தெரிந்த கண்ணம்மா... உடனே போட்டார் போன்!

Bharathi Kannamma Serial Episode : திடீர் தலை சுற்றல் மயக்கம் காரணமாக டாக்டரை பார்க்க வருகிறார் கண்ணம்மா. அப்போது அவரை செக் பண்ணும் டாக்டர் உங்களுக்கு ஒன்னும் இல்ல. ஓய்வு இல்லாம வேலை பாக்குறீங்க அதான் இப்படி ஆகியிருக்கு என சொல்லி மருந்து மாத்திரைகளை எழுதி கொடுக்கிறார். அப்போது டாக்டர் உன் பெயர் என்னம்மா என்று கேட்க, கண்ணம்மா தனது பெயரை சொல்கிறாள். அதை கேட்டு ஷாக் ஆகும் டாக்டர் உங்க மாமியார் பேரு செளந்தர்யா தான என்று கேட்கிறார்.

Advertisment

ஆமா என் அத்தைய உங்களுக்கு தெரியுமா என்று கண்ணம்மா கேட்கிறாள். உங்களையும் தெரியும் உங்க மாமியாரையும் தெரியும் என்று சொல்லும் டாக்டர், 8 வருடத்திற்கு முன்பு ஹாஸ்பிட்டலில் ரிப்போர்ட்டை விட்டுட்டு போய்ட்டீங்க என்பதை கண்ணம்மாவிடம் சொல்கிறார். அதன்பிறகு எப்படி இருக்காங்க குழந்தைகள் என்று டாக்டர் கேட்க, அதை கேட்டு ஷாக் ஆகும் கண்ணம்மா எனக்கு ஒரு பொண்ணுதான் என்று சொல்கிறாள்.

ஆனால் டாக்டர் உங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருக்கும் அதில் இன்னொரு குழந்தை எங்கனுதான் நான் கேட்கிறேன் என்று சொல்கிறார். இதை கேட்டு ஷாக் ஆகும் கண்ணம்மா அதை நம்ப மறுக்கிறாள். ஆனால் டாக்டர் அழுத்தமாக உங்களுக்கு பிறந்தது இரட்டை குழந்தைதான் என் சொல்கிறார். அதை கேட்டு வெளியே வரும் கண்ணம்மா உடனடியாக சௌந்தர்யாவுக்கு போன் செய்கிறாள்.

அப்போது சௌந்தர்யா லக்ஷ்மியை பற்றி சொல்லிக்கொண்டிருக்க இடையில் குறுக்கிடும் கண்ணம்மா எனக்கு இரட்டை குழந்தை பிறந்த்தா என்று கேட்கிறாள். இதை கேட்டு ஷாக் ஆகும் செளந்தர்யா மௌனமாக இருக்க, எனக்கு பிறந்த்து இரட்டை குழந்தை அப்படினா அந்த இன்னொரு குழந்தை எங்க என்று கேட்கிறாள் கண்ணம்மா. ஆனால் சௌந்தர்யா கண்ணம்மா நீ பேசுவது எதுவுமே கேட்கல என்று சொல்லி போனை கட் செய்கிறாள்.

Advertisment
Advertisements

அப்போது சௌந்தர்யாவின் கணவன் என்னாச்சி என்று கேட்க, அப்போது கண்ணம்மா எனக்கு இரட்டை குழந்தை பிறந்த்து உண்மையா என்று கண்ணம்மா கேட்கிறாள் என சௌந்தயா சொல்கிறாள். அதை கேட்டு அவளது கணவன் ஷாக் ஆக கண்ணம்மா ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆனது முதல் பிரசவம் ஆனது வரை அனைத்துயும் சொல்கிறாள் செளந்தர்யா அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bharathi Kannamma Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: