Advertisment

ஹேமாவை வைத்து ஸ்கெட்ச் போடும் கண்ணம்மா... சிக்குவரா பாரதி?

TamilSerial Update : கண்ணம்மா உங்க புள்ள விவாகரத்து வாங்கினால் ஹேமாவை இந்த வீட்டில் இருக்க விடமாட்டேன். அவளை கூட்டிக் கொண்டு போவேன் என சொல்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஹேமாவை வைத்து ஸ்கெட்ச் போடும் கண்ணம்மா... சிக்குவரா பாரதி?

Bharathi Kannamma Serial Episode Update : விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி கண்ணம்மாவுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், சௌந்தர்யாவிடம் கண்ணம்மாவுக்கு உதவி செய்யக்கூடாது என்று சத்தியம் வாங்கிக்கொள்கிறான்

Advertisment

இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோடு

வீட்டில் சௌந்தர்யாவிடம் பேசும் கண்ணம்மா பாரதி விவாகரத்து நோட்டீஸ் அனுப்ப அனுப்பியது குறித்த பேசுகிறாள். அப்போது சௌந்தர்யா தான் சத்தியம் செய்தது குறித்து சொல்கிறாள். இதனால் ஷாக் ஆகும் கண்ணம்மா உங்க புள்ள விவாகரத்து வாங்கினால் ஹேமாவை இந்த வீட்டில் இருக்க விடமாட்டேன். அவளை கூட்டிக் கொண்டு போவேன் என சொல்கிறார்.

இதனியே பாரதி ரூமில் இருந்து வெளியே வர பார்க்கிறான் ஆனால் ரூம் வெளியில் பூட்டி இருப்பதை கண்டு கோபப்பட்டு கதவை தட்டுகிறான். அப்போது அந்த பக்கம் வரும் சௌந்தர்யா திறந்தவிடுகிறாள். யார் கதவை பூட்டியது என்று பாரதி கேட்க, யாரோ தெரியாமல் மூடி இருப்பார்கள் என சௌந்தர்யா சமாளிக்கிறாள். ஆனால் உண்மையை தெரிந்துகொண்ட பாரதி அந்த கண்ணம்மா வந்தாளா என கோவமாக கேட்கிறார். அதற்கு சௌந்தயார் ஆமாம் கண்ணம்மா வந்தால் இப்போ என்ன எனறு கேட்கிறாள்.

அதற்கு பாரதி  என்ன விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிவிட்டேன் என அழுது புலம்பினால என பாரதி கேட்கிறார். அதற்கு சௌந்தர்யா அவள் எதற்கு அழ வேண்டும் என்று கேட்கிறாள் இதனிடையே கண்ணம்மாவுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியது குறித:து அஞ்சல் அகில் பேசிக்கொண்டிருக்க, கண்ணம்மா தான் பாவம் அவள் சின்ன வயதில் யாரிடமும் பாசம் கிடைக்காமல் வளர்ந்தாள் என அஞ்சலி சொல்கிறாள். அதற்கு அகில் உன் அப்பாவிற்கு போன் செய்து பேசு என சொல்கிறார்.

அதன்பிறகு அப்பாவுக்கு போன் செய்யும் அஞ்சலி நடந்ததை சொல்கிறார். இதை கேட்டு கண்ணம்மாவின் அப்பா சௌந்தர்யாவை பார்த்து, பணக்காரர் படித்தவர் என திருமணம் செய்து கொடுத்துவிட்டு இப்படி கஷ்டப்படுகிறாள் என சொல்கிறார். அதற்கு செளந்தர்யா இப்போது என்ன நடக்கிறது என தெரியவில்லை. நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்டுக்கொள்கிறேன் இப்படி ஒரு புள்ளையை பெற்றதற்கு நான் மிகவும் வருத்தப்படுகிறேன் என சொல்கிறாள். அதற்கு கண்ணம்மாவின் அப்பா நீங்க நினைத்தால் ஏதாவது செய்யலாம் என கெஞ்ச, ஐயோ என்னால் எதுவும் செய்ய முடியாது என்று கூறும் சௌந்தர்யா பாரதி சத்தியம் வாங்கியதை சொல்கிறாள்.

நீங்களே இப்படி கைவிட்டால் நாங்கள் என்ன செய்வது என்று கண்ணம்மாவின் அப்பா கேட்க, கண்ணம்மா தலையெழுத்துப்படி தான் எல்லாம் நடக்கும் என சொல்லி கிளம்ப சொல்கிறார் சௌந்தர்யா. கண்ணம்மாவிற்கு எந்த நல்லதும் நடக்கவில்லை என நினைத்து கண்ணம்மா அப்பா வருத்தப்படுகிறார் அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bharathi Kannamma Serial Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment