Advertisment

மெட்டி ஒலி இயக்குனர் 4 ஆண்டுகளுக்கு பின் ரீ-என்ட்ரி... மாஸாக வந்த புதிய சீரியல் அறிவிப்பு

கல்யாண வீடு சீரியலுக்கு பின் தான் இயக்க உள்ள அடுத்த சீரியல் குறித்து அறிவிப்பை இயக்குனர் திருச்செல்வம் வெளியிட்டுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Thirumurugan

இயக்குனர் திருமுருகன்

தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள இயக்குனர் திருமுருகன், கடந்த சில வருடங்களாக எந்த சீரியலையும் இயக்காமல் இருந்து வரும் நிலையில், தற்போது தனது அடுத்த சீரியல் தொடர்பான அறிவிப்பை வீடியோ மூலம் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

Advertisment

கடந்த 1998-ம் ஆண்டு பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோகுலம் காலனி என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் இயக்குனர் திருமுருகன். அதனைத் தொடர்ந்து சில தொடர்களை இயக்கிய அவர், 2002-ம் ஆண்டு மெட்டி ஒலி என்ற சீரயலை இயக்கியிருந்தார். 90-ஸ் கிட்ஸ் மத்தியில் இன்றும் பாராட்டுக்களை பெற்று வரும் இந்த சீரியல் 3 ஆண்டுகள் ஒளிபரப்பாகி வந்தது.

2005-ம் ஆண்டு இந்த சீரியல் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, அடுத்து நாதஸ்வரம், தேனிலவு, குலதெய்வம் உள்ளிட்ட சீரியல்களை இயக்கிய திருமுருகன், கடைசியாக கல்யாண வீடு என்ற சீரியலை இயக்கியிருந்தார். கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய இந்த சீரியல் 2020-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. தான் இயக்கிய அனைத்து சீரியல்களிலும் கோபி என்ற முக்கிய கேரக்டரில் திருமுருகனே நடித்திருந்தார்.

மேலும் தான் இயக்கய நாதஸ்வரம் சீரியலில், 23 நிமிடங்கள் 25 வினாடிகள் சிங்கிள் ஷாட்டில் படமாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ள இயக்குனர் திருமுருகன், பரத் நடிப்பில் வெளியான எம்.மகன், முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என 2 படங்களையும் இயக்கியுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக இயக்கம் மற்றும் நடிப்பு என எந்த பணிகளையும் செய்யாமல் இருந்த நிலையில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தனது அடுத்த சீரியல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தனது திரு டிவி என்ற யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள இந்த வீடியோ பதிவில், தான் இயக்கிய மெட்டி ஒலி, நாதஸ்வரம், கல்யாண வீடு ஆகிய 3 சீரியல்களும் ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு புதிய படைப்பு என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ப்ரமோ தற்போது வைரலாகி வரும் நிலையில், எதிர்நீச்சல் சீரியலுக்கு போட்டியாக திருமுருகன் என்ட்ரி கொடுக்க உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். குடும்ப உறவுகளின் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் திரைக்கதை அமைப்பதில் வல்லவரான திருமுருகன் அடுத்து இயக்கப்போகும் சீரியல் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Metti oli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment