Vijay TV Serial : ஷாக் கொடுத்த வெண்பா : அதிர்ச்சியில் பாரதி.... யோசிப்பாரா?

Bharathi Kannamma Serial : பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் காணலாம்

Bharathi Kannamma Serial : பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் காணலாம்

author-image
WebDesk
New Update
Vijay TV Serial : ஷாக் கொடுத்த வெண்பா : அதிர்ச்சியில் பாரதி.... யோசிப்பாரா?

பர்த்டே பங்ஷனுக்கு லட்சுமியை கண்ணம்மா சம்மதம் சொல்லியதால் சந்தோஷம் அடையும் சௌந்தர்யா, எனக்கு கொஞ்சம் டையர்ட்டா இருக்கு, இங்க கொஞ்சம் நேரம் படுத்துக்கவா என கண்ணம்மாவிடம் கேட்கிறாள். வாங்க அத்தை உள்ள படுக்கலாம் என கண்ணம்மா அழைக்க, நான் இங்கயே தரைல படுத்துக்கிறேன்மா என சொல்லிவிட்டு ஹாலில் படுக்கிறாள் சௌந்தர்யா.

Advertisment

அடுத்து வெண்பா வீட்டில், சாந்தி, இன்னைக்கு பாரதி சார் என்கிட்ட சொன்ன விஷயத்தை வெண்பா அம்மாகிட்ட சொல்லிருப்பாரு. அவுங்க வீட்டுக்கு வரும்போது முகத்துல தெரியுற சந்தோஷத்தை பார்க்கணும் நினைத்தக்கொண்டிருக்கும்போது அந்த நெரத்தில்  மனிதில் மகிழ்ச்சியுடன் வெண்பா வீட்டிற்கு வருகிறாள். அவளிடம் என்னாச்சும்மா என சாந்தி கேட்கும்போது, நீ சொன்ன மாதிரி பாரதி எனக்கு புரோபோஸ் பண்ணிட்டான். அடுத்த வாரமே கல்யாணத்தை வைச்சுக்கலாம்ன்னு சொல்லிட்டான் என சொல்லி சந்தோஷப்படுகிறாள்.

இந்த சந்தோஷத்தில், வெண்பா கிரெடிட் கார்ட், நெறைய பணம் எடுத்து சாந்தியிடம் கொடுக்கிறாள். இதை பார்த்து சாந்தி சந்தோஷம் அடைகிறாள். ஆனால் இது வெறும் கனவுதான். இதற்கிடையில் பூஜை சாமான்களுடன், துளசி, சுமதி இருவரும் கண்ணம்மா வீட்டிற்கு வருகின்றனர். அப்போது சௌந்தர்யா ஏதும் விசேஷமா என கேட்க நாங்க மூவரும் சேர்ந்து மாவு விக்கிற பிசினஸ் பண்ண போகிறோம் என கண்ணம்மா சொல்கிறாள். இதை கேட்டு சந்தோஷப்படும் சௌந்தர்யா உங்க மூனு பேரையும் பார்க்கும் போது எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு. கூடிய சீக்கிரம் பெரிய அளவுல ஜெயிப்பீங்க என சொல்கிறாள்.

தொடர்ந்து பிசினஸ்க்கு என்ன பெயர் வைச்சு இருக்கீங்க என சௌந்தர்யா கேட்க, கண்ணம்மா இட்லி தோசை மாவு கடை என துளசி சொல்கிறாள். இதனையடுத்து சௌந்தர்யா கையாலே பிசினஸ் ஆரம்பிக்குமாறு கண்ணம்மா கேட்கிறாள். ஆனால் இதற்கு சௌந்தயா மறுக்கவே, துளசியும் பிசினஸில் ஜெயித்த சூப்பர் வுமன் நீங்க ஆரம்பிச்சு வைச்சா எங்களுக்கு உற்சாகமாக இருக்கும் என சொல்கிறாள். அதனை தொடர்ந்து சௌந்தர்யா தன்னுடைய கையால் துவங்கி வைக்கிறாள்.

இதற்கிடையில் கிளீனிக்கில், பாரதிக்காக காத்துக்கொண்டிருக்கும்போது, ஒரு தந்தை தீ காயத்துடன் ஒரு சிறுமியை அழைத்துக்கொண்டு வருகிறார். அப்போது பாரதியும் வந்துவிட, நர்ஸ் என்னாச்சு என அந்த தந்தையிடம் விசாரிக்கிறாள். என்னோட ரெண்டாவது பொண்டாட்டி இப்படி சூடு வைச்சுட்டாம்மா என சொல்கிறாள். அதனை தொடர்ந்து அந்த சிறுமிக்கு ஊசி போடச்சொல்லும் வெண்பா, மருந்து எழுதி தர்றேன் வெயிட் பண்ணுங்க என தந்தையிடம் சொல்கிறாள்.

Advertisment
Advertisements

தொடர்ந்து தந்தையிடம் மருந்து சீட்டை கொடுக்கும் வெண்பா, சூடு வைக்காம என்ன பண்ணுவா உங்க பொண்டாட்டி, நீங்க வரிசையா கல்யாணம் பண்ணுவீங்க. வர்றவ உங்க குழந்தைக்கு ஆயா வேலை பார்க்கனுமா? என சொல்கிறாள். இதை கேட்ட பாரதி அதிர்ச்சியில் உரைய அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோட்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bharathi Kannamma Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: