சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், சமீபத்திய எபிசோடுகள் பரபரப்பை ஏற்படுத்தினாலும், காட்சி அமைப்புகள் நெட்டிசன்கள் மத்தியில் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
Advertisment
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். சகோதரர்கள் கூட்டு குடும்பமாக வாழும் ஒரு வீட்டில் ஆணாதிக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், தான் படிக்கவில்லை என்றாலும், படித்த பெண்களை திருமணம் செய்துகொண்டு தங்களது காலடியில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து படித்த பெண்களை தேடி திருமணம் செய்துகொள்கின்றனர்.
இந்த ஆணாதிக்கத்திற்கு மத்தியில் அந்த மருமகள்கள் மற்றும் அவரது குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் தான் இந்த சீரியலின் கதை. இந்த சீரியலில் கொடூர வில்லனாக ஆணாதிக்கம் படைத்த மனிதனாக வரும் ஆதி குணசேகரன் கேரக்டர், தனது மகள் மற்றும் மனைவிக்கே துரோகம் செய்யும் கொடூர மனம் படைத்தவராக வருகிறார். இதில் கடந்த சில வாரங்களாக தர்ஷினி கடத்தல் தொடர்பான எபிசோடுகள் அரங்கேறி வருகிறது.
பள்ளியில் இருந்து மர்மநபர்கள், தர்ஷினியை கடத்திவிட, அனைவரும் அவளை தேடிக்கொண்டிருக்கின்றனர். மறுபுறம் குழந்தையை கடத்தி வைத்திருப்பதே அவளது அம்மா ஈஸ்வரிதான் என்று ஆதி குணசேகரனும், அவரது அம்மா விசாலாட்சியும் சொல்ல, பிரச்சனை பெரிதாகிறது. இந்த நிலையில், அண்ணனுக்கு சாதமாக இருந்த கதிர் தற்போது அண்ணனுக்கு எதிராக திரும்பியுள்ளதால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Advertisment
Advertisements
அதேபோல் குழந்தை கடத்தல் வழக்கில் 4 பெண்கள் மற்றும் ஜீவானந்தம் ஆகியோரை போலீசார் கைது செய்து கொடுமைபடுத்தி வருகின்றனர். ஒரு கட்டத்தில் தர்ஷினியை கடத்தியது அவளது அப்பா குணசேகரன் தான் என்பது தெரியவந்த நிலையில், ஜீவாநந்தம் அவளை காப்பாற்றுகிறான். இதை அறிந்த குணசேகரன் நல்லவர் போல் வேஷம் போடுகிறார். குழந்தை கடத்தல் வழக்கில் சிறை சென்ற ஈஸ்வரிக்கு ஜாமீன் கிடைத்துவிடுகிறது. ஆனால் ஈஸ்வரி தர்ஷினியை பார்க்க கூடாது என்று நீதிமன்றத்தில் ஆர்டர் வாங்குகிறார் குணசேகரன்.
தர்ஷினி இந்த கடத்தல்’ சம்பவத்தில் இருந்து இன்னும் மீளாத நிலையில், இப்போது தர்ஷினியை திருமணம் செய்துகொள்வேன் என்று கரிகாலன் முயற்சிக்கிறார். இதனால் வீட்டில் பிரச்சனை வெடிக்க, சத்தம் போடும் குணசேகரன், கரிகாலன் தான் என் மாப்பிள்ளை, என் மகளை அவனுக்கு தான் கட்டிக்கொடுப்பேன் என்று சொல்கிறான். இதனால் அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். இந்த ப்ரமோ வைரலாகி வரும் நிலையில், பலரின் கோபத்திற்கு ஆளாகியுள்ளது.
இந்த சீரியல் தற்போது தவறான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது என்றும், பெற்ற பிள்ளையை அப்பாவே கடத்தி வைத்துக்கொண்டு, அம்மாதான் கடத்தினார் என்று அவளை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு, ஜாமினில் வெளியான அவளை தனது பிள்ளையை பார்க்க விடாமல் செய்வது, பள்ளியில் படிக்கும் குழந்தைக்கு திருமணம் செய்து வைப்பது என எதிர்மறையாக சென்றுகொண்டிருப்பதால் ரசிகர்கள் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“