/tamil-ie/media/media_files/uploads/2023/03/Jayasri.jpg)
80 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை ஜெயஸ்ரீ சன்டிவியின் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க உள்ளார்.
சன்டிவியின் கோலங்கள் சீரியல் மூலம் 90- இல்லத்தரசிகள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றவர் திருச்செல்வம். அதனைத் தொடர்ந்து ஒரு சில சீரியல்களை இயக்கிய இவர், தற்போது மீண்டும் சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரை இயக்கி வருகிறார்.
நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியலில் அண்ணன் தம்பிகள் ஒன்றாக வாழ்ந்து வரும் வீட்டில் அவர்களுக்கு படித்த பெண்கள் மனைவிகளாக வருகின்றனர். ஆனாலும் குடும்பத்தில் அவர்களை ஒரு அடிமை போல் நடத்தப்பட்டு வருகின்றனர். கடைசி மருமகளாக வரும் ஜனனி இந்த நிலையை மாற்ற முயற்சிக்கிறார். அதனால் அடுத்து என்ன நடக்கிறது என்பதே இந்த சீரியலின் கதை.
வரலாறு படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்த நடிகை கனிகா, நடிகை ப்ரியதர்ஷினி, ஹரிப்பிரியா உள்ளிட்ட பலர் இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நிலையில், 80-களில் பிரபல நடிகையாக இருந்த ஜெயஸ்ரீ இந்த சீரியலில் சிறப்புத்தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மோகனின் தென்றலே என்னை தொடு படத்தின் மூலம் அறிமுகமான ஜெயஸ்ரீ கடைசியாக மணல்கயிறு 2 படத்தில் நடித்திருந்தார்.
திருமணத்திற்கு பின் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட நடிகை ஜெயஸ்ரீ நீண்ட இடைவெளிக்கு பிறகு ரீ-என்டரி கொடுக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.