/indian-express-tamil/media/media_files/x36zAD6m47sE7NXbHnKO.jpg)
எதிர்நீச்சல் ஆதி குணசேகரன் என்டரி
சன்டிவியின் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து ஆதி குணசேகரன் யார் என்பது தொடர்பான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ள நிலையில், இந்த ப்ரமோ ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது
சன்டிவியின் எதிர்நீச்சல் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தது ஆதி குணசேகரன் கேரக்டர். இந்த கேரக்டரில் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்திக்கொண்ட நடிகர் மாரிமுத்து பலரின் பாராட்டுக்களையும் பெற்று வந்தார்.
மேலும் அவரின் டைமிங் ரியாக்ஷன் பல மீம்ஸ் மெட்டீரியலாக கொண்டாடப்பட்டது. ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு எதிர்நீச்சல் சீரியலின் டப்பிங் பேசும்போது ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மாரிமுத்து மரணமடைந்தார், அவரின் மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் அடுத்து ஆதி குணசேரகன் கேரக்டரில் நடிக்கப்போவது யார் என்பது தொடர்பான எதிர்பார்ப்பும் இருந்தது.
இந்த கேரக்டருக்காக முதலில் எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தியிடம் சீரியல் குழு பேசியுள்ளதாக தகவல் வெளியானது. அடுத்து நடிகர் பசுபதியிடம் பேசியுள்ளதாக கூறப்பட்டது. ஆனாலும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், சீரியலில் ஆதி குணசேகரன் தலைமறைவாகிவிட்டதாக காட்சிகள் அமைக்கப்பட்டது.
இதனிடையே தற்போது ஆதி குணசேரகரன் மீண்டும் தனது வீட்டிற்கு என்டரி ஆகும் ப்ரமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரமோவில் குணசேகரனாக நடிக்கும் நடிகரின் முகம் காட்டப்படவில்லை என்றாலும், அது வேல ராமமூர்த்தி தான் என்று உறுதி செய்யும் அளவுக்கு இருக்கிறது. இதன் மூலம் மாரிமுத்து போல் வேல ராமமூர்த்தியும் குணசேகரன் கேரக்டருக்கு பலம் சேர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.