Advertisment

குணசேகரன் ரீ-என்ட்ரி... தர்ஷன் கொடுத்த ரியாக்ஷன் : எதிர்பார்ப்பில் எதிர்நீச்சல்

ஆதி குணசேகரன் சிறைக்கு சென்றுவிட்டதால் இனி அவர் கேரக்டர் இல்லாமல் சீரியல் வேறு கோணத்தில் பயணிக்கும் என்று தகவல் வௌயானது.

author-image
WebDesk
New Update
Ethirneechal Promo

எதிர்நீச்சல் குணசேகரன் ரீ-என்ட்ரி

எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் மீண்டும் வீடு திரும்பியுள்ளளதால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இன்றைய எபிசோட்டுக்கான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது.

Advertisment

சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். பெண்களின் வாழ்வியலை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து வந்தவர் நடிகர் மாரிமுத்து. கடந்த சில வாரங்களுக்கு முன் இவர் மரணமடைந்துவிட்ட நிலையில், இவருக்கு பதிலாக குணசேகரன் கேரக்டரில் என்ட்ரி ஆனவர் வேல ராமமூர்த்தி.

எழுத்தாளரும் நடிகருமான இவர், தற்போது பல படங்களில் நடித்து வருவதால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக, இவர் அறிமுக எபிசோடிலேயே போலீசை அடிப்பதுபோல் காட்சிகள் அமைத்து அடுத்த எபிசோட்டில் இவர் சிறைக்கு செல்வது போல் காட்சிகள் அமைக்கப்பட்டது. ஆதி குணசேகரன் சிறைக்கு சென்றுவிட்டதால் இனி அவர் கேரக்டர் இல்லாமல் சீரியல் வேறு கோணத்தில் பயணிக்கும் என்று தகவல் வௌயானது.

ஆனால் இந்த தகவலை பொய்யாக்கும் விதமாக தற்போது வேல ராமமூர்த்தி ஆதி குணசேகரனாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில், குடும்பத்தில் அனைவரும் வெளியில் சென்றுகொண்டிருக்கிறனர். இதில் அவர்களை தொந்தரவு செய்யும் வீதமாக ஜான்சி ராணி அவர்களுடன் சென்றுள்ளார். அடுத்து கதிர் ஒருவருடன் சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருக்க கரிகாலன் மாமா லேட் பண்ண ப்ளான் டைவர்ட் ஆகிவிடும் என்று சொல்கிறார்.

சிறையில் இருந்து வெளியில் வரும் ஆதி குணசேகரன் வீட்டிற்கு வருகிறார். அடுத்து என்னைக்கு நீ உங்க ஆத்தா பேச்சை கேட்க ஆரம்பிச்சையே அன்னைக்கே உன் புத்தி மறந்துபோச்சு என்று தர்ஷனிடம் சொல்கிறார். அதற்கு ஒன்றும் சொல்லாத தர்ஷன் முறைத்து பார்த்துக்கொண்டிருக்க, என்னடா இவன் இப்படி முழிக்கிறான் என்று கேட்கிறார். அதற்கு ஞானம் முழிக்கல அண்ணே முறைக்கிறான் என்று சொல்கிறார்.

முறைப்பாப்ல வளர்ப்பு அப்படி என்று சொல்ல, விசாரலாட்சி என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறார். அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது. கோவிலில் அப்பத்தா ஜீவானந்தம் இருவரையும் போட்டு தள்ள கதிர் கும்பல் ரெடியாக, ஜீவனந்தம் கதிர் மற்றும் குணசேகரனை போட்டு தள்ள அதே ப்ளானுடன் வருகிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

ethirneechal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment