/indian-express-tamil/media/media_files/DBv5YRDNX8s0fbHinhXi.jpg)
எதிர்நீச்சல் மாரிமுத்து
எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து வந்த நடிகர் மாரிமுத்து மரணமடைந்த நிலையில், அடுத்த குணசேகரன் யார் என்ற கேள்விக்கு இயக்குனர் திருச்செல்வம் தற்காலிக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில், இயக்குனர் நடிகர் என்று வலம் வந்த நடிகர் மாரிமுத்து சின்னத்திரையின் எதிர்நீச்சல் சீரியல் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றார். இந்த சீரியலில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்திருந்த நிலையில், டிஆர்பி ரேட்டிங்கில் எதிர்நீச்சல் உச்சம் தொட்டதற்கு முக்கிய காரணங்களில் ஒருவராக இருந்தவர் மாரிமுத்து.
இதனிடைகே கடந்த சில வாரங்களுக்கு முன்பு எதிர்நீச்சல் தொடரில் டப்பிங் பணிகளில் இருந்த மாரிமுத்து திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இந்த மரணம் எதிர்நீச்சல் சீரியலில் தவிர்க்க முடியாத வெற்றிடத்தை ஏற்படத்தியுள்ள நிலையில், அடுத்த ஆதி குணசேகரன் யார் என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.
மேலும் இந்த கேரக்டருக்காக நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தியிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்பட்ட நிலையில், அவர் இதுவரை எந்த பதிலும் சொல்லாததால் அடுத்து நடிகர் பசுபதியுடன் பேச்சுவார்த்தை நடந்தாகவும் தகவல் வெளியானது. ஆனால் இந்த இரு பேச்சுவார்த்தை குறித்தும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், தற்போது எதிர்நீச்சல் சீரியல் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி இதுவரை வீட்டில் நடப்பது அனைத்தையும் மாடியில் இருந்து குணசேகரன் பார்த்துக்கொண்டிருப்பது போல் காட்சிகள் இருந்த நிலையில், தற்போது ஆதி குணசேகரன் தனது சொத்துக்களை உறவினர்களுக்கு எழுதி வைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டதாக இயக்குனர் திருச்செல்வம் கதையை மாற்றி இப்போதைக்கு ஆதி குணசேகரன் கேரக்டர் குறித்த தகவலுக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.