Advertisment

டி.ஆர்.பியில் வீழ்ந்த எதிர்நீச்சல்... காரணம் இதுதானா?

வேல ராமமூர்த்தி வந்தவுடன் அதிரடியில் இறங்கியதும், மாரிமுத்து அளவுக்கு இவரின் நடிப்பு ரசிகர்களை கவராததும் சீரியலின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

author-image
WebDesk
New Update
Ethirneechal Serial

எதிர்நீச்சல் நடிகைகள்

சன் டி.வியின் முக்கிய சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். நடிகை கனியா, ப்ரியார்ஷினி, சத்யபிரியா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வரும் இந்த தொடர் பெண்கள் அடிமைத்தனம், ஆணாதிக்கம் உள்ளிட்ட செயல்களை மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற முக்கிய கேரக்டரில் நடித்து வந்தவர் இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து.

Advertisment

இவரின் நக்கல் நையாண்டி தோணியுடன் கூடிய பேச்சு, சைலண்டான வில்லத்தனம் என தனக்கே உரிய தனித்துவத்துடவ் நடித்து தன்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்தார். மேலும் இந்த சீரியல் இதுவரை எந்த சீரியலும் பெறாத அதிக டிஆர்பி ரேட்டிங்கை பெற்று சாதனை படைத்தது. மாரிமுத்து இருந்த வரை டிஆர்பி ரேட்டிங்கில் எப்போதும் முதலிடத்தில் இந்த எதிர்நீச்சல் தற்போது சரிவை சந்தித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்து திடீரென மரணமடைந்தார். அவரது மரணம் தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரையில் வெற்றிடத்தை உருவாக்கியது. அவர் இறந்த பிறகும், அவரது பழைய காட்சிகளை பயன்படுத்தி ஒருசில வாரங்கள் எதிர்நீச்சல் சீரியல் ஒளிபரப்பாகி வந்த நிலையில், சமீபத்தில் ஆதி குணசேகரனாக நடிகர் வேலா ராமமூர்த்தி என்ட்ரி கொடுத்தார். இவர் அறிமுகமாகும் காட்சியோ போலீசை அடிப்பது போன்ற காட்சியாக அமைந்தது.

மாரிமுத்து இருந்தவரை அவர், எப்போதுமே அதிரடியின் பக்கம் இல்லாமல் சைலண்டாக காய் நகர்த்தக்கூடியவராக இருந்தார். ஆனால் அந்த கேரக்டரில் வேல ராமமூர்த்தி வந்தவுடன் அதிரடியில் இறங்கியதும், மாரிமுத்து அளவுக்கு இவரின் நடிப்பு ரசிகர்களை கவரராததும் சீரியலின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. மாரிமுத்து மறைவு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்திய அதே நேரத்தில் வேல ராமமூர்த்தி அவரின் இடத்தை பூர்த்தி செய்வரா என்ற ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

ஆனால் அந்த எதிர்பார்ப்புகளை வேல ராமமூர்த்தி ஈடு செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அவர் என்டரி ஆன பிறகும் டிஆர்பியில் சில வாரங்கள் முதலிடத்தில் இருந்த எதிர்நீச்சல் தற்போது திருவிழாவில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் பரபரப்பாக சென்று கொண்டிருந்தாலும், டிஆர்பியில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதன்படி இந்த வார டிஆர்பியில் 9.55 புள்ளிகள் பெற்றுள்ள எதிர்நீச்சல் சீரியல் 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில், 10.40 புள்ளிகள் பெற்றுள்ள வானத்தைபோல சீரியல் முதலிடத்திலும், 10.14 புள்ளிகளுடன் கயல் 2-வது இடத்திலும், 9.75 புள்ளிகளுடன் சுந்தரி 3-வது இடத்திலும், 9.62 புள்ளிகளுடன் சிங்கப்பெண்ணே 4-வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
ethirneechal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment