/indian-express-tamil/media/media_files/iSe2BwKrLqkAWHg6B0it.jpg)
எதிர்நீச்சல் சீரியல்
சன்டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றான எதிர்நீச்சல் சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதால், டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருக்கும் சீரியலின் நேரம் மாற்றப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரையில் சன்டிவி சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவனம் ஈர்த்து வரும் இந்த சீரியல்கள் சிட்டியை தாண்டி கிராமபுறங்களிலும் நல்ல வரவேற்பை பெற்று வருவதால், டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் முக்கிய இடத்தை பெற்று வருகிறது. அதேபோல் ஒரு சீரியல் முடிவுக்கு வரும்போது உடனடியாக புதிய சீரியல் களமிறங்கிவிடும்.
மேலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற ஒரு சீரியல் முடிவுக்கு வரும்போது, அந்த சீரியல் ஒளிபரப்பான இடத்திற்கு மற்றொரு முன்னணி சீரியல் வரும். அந்த வகையில் தற்போது முக்கிய சீரியலான எதிர்நீச்சல் முடிவுக்கு வர உள்ளதால், அந்த இடத்திற்கு ஒளிபரப்பை தொடங்கியதில் இருந்து டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியல் வநதுள்ளது.
இதுவரை 9 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளது. இந்த சீரியலின் க்ளைமேக்ஸ் கட்சிக்காக அனைவரும் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வர உள்ளதால், இனி இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியல் இனி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வர உள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது சிங்கப்பெண்ணே சீரியல் ஒரு மணி நேரம் தாமதமாக ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.