Advertisment

எதிர்நீச்சல் குணசேகரனாக கலக்கிய மாரிமுத்து: திடீர் மரணத்திற்கு பிரபலங்கள் இரங்கல்

இயக்கம் மட்டுமல்லாமல் நடிகதராகவும் தன்னை நிலை நிறுத்திக்கொண்ட மாரிமுத்து, எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக கலங்கி வந்தார்.

author-image
WebDesk
New Update
Ethirneechal Marimuthu

எதிர்நீச்சல் மாரிமுத்து மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்

சின்னத்திரையில் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து அசத்தி வந்த நடிகர் ஜி. மாரிமுத்து இன்று திடீர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்த சம்பவம் திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இயக்குனர் வசந்த் மற்றும் எஸ்ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஜி மாரிமுத்து. கடந்த 1966-ம் ஆண்டு தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் பிறந்த இவர், சினிமாவின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக சென்னைக்கு வந்துள்ளார். ஹோட்டலில் சர்வர், கவிஞர் வைரமுத்துவின் உதவியாளர்,  ராஜ்கரனிடம் உதவி இயக்குனர் என பல வேலைகளை செய்துள்ளார்.

அதன்பிறகு 1994-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ஆசை படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய மாரிமுத்து 2008-ம் ஆண்டு பிரசன்னா நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் என்ற படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான மாரிமுத்து 2014-ம் ஆண்டு வெளியான புலிவால் படத்தையும் இயக்கி இருந்தார். இயக்கம் மட்டுமல்லாமல் நடிகதராகவும் தன்னை நிலை நிறுத்திக்கொண்ட மாரிமுத்து, எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக கலங்கி வந்தார்.

இதனிடையே இன்று காலை டப்பிங் பணியில் இருந்த நடிகர் மாரிமுத்து திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருமை் நிலையில், எதிர்நீச்சல் சீரியலில் அவருடன் நடித்து வந்த நட்சத்திரங்கள் பலரும் அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இது குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

‘’தம்பி மாரிமுத்துவின் மரணச் செய்தி கேட்டு என் உடம்பு ஒருகணம் ஆடி அடங்கியது சிகரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தவனை மரணத்தின் 'பள்ளத்தாக்கு விழுங்கிவிட்டது.

என் கவிதைகளின் உயிருள்ள ஒலிப்பேழை அவன் என் உதவியாளராய் இருந்து நான் சொல்லச் சொல்ல எழுதியவன்

தேனியில் நான்தான் திருமணம் செய்துவைத்தேன் இன்று அவன்மீது இறுதிப் பூக்கள் விழுவதுகண்டு இதயம் உடைகிறேன்

குடும்பத்துக்கும் கலை அன்பர்களுக்கும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே ஆறுதல் சொல்கிறேன்’’ என பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்து மனைவியாக நடித்து வரும் நடிகை கனிகா வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவில்,

ஏன் இவ்வளவு சீக்கிரம் எங்களை விட்டு பிரிந்தீர்கள்?? ஏன் சார் இவ்ளோ அவசரப்பட்டு எங்கலலாம் விட்டு போயிடீங்க? உங்க சிரிப்பு,உங்க ஞானம்,உங்க பேச்சு எல்லாம் கண்ணு முன்னாடியே நிக்குது. நாங்கள் உங்களை மிகவும் மிஸ் செய்வோம் சார். உங்கள் குடும்பத்திற்கு வலிமை தர இறைவனை பிரார்த்திக்கிறேன். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் ஐயா. நீங்கள் ஒரு வெற்றிடத்தை விட்டு சென்றுவிட்டீர்கள் என பதிவிட்டுள்ளார்.

நடிகை ஹரிப்பிரியா இசை வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவில்,

இன்னும் இதை நம்ப முடியவில்லை... என்னா சார் அவசரம்.. எங்களை இப்படியே விட்டு விட்டீர்களே... நந்தினி மிஸ் லைக் ஹெல் மாமா... உண்மையான கலைஞனுக்கு முடிவே இல்லை... எங்கள் இதயங்களில் நீங்கள் என்றும் இருப்பீர்கள்... உன் ஆன்மா சாந்தியடையட்டும் என பதிவிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பதிவில், 

மாரிமுத்து ஒரு அருமையான மனிதர். அவருடைய இறப்பு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய மனமார்ந்த அஞ்சலி என பதிவிட்டுள்ளார்.

Suntv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment