New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/06/EthirNeechal-2.jpg)
எதிர்நீச்சல் சீரியல்
இந்த வாரம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருக்கும் சீரியல் எதிர்நீச்சல்.
எதிர்நீச்சல் சீரியல்
சின்னத்திரையின் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் மத்தியில நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், சின்னத்திரை வரலாற்றில் இந்த சீரியலுக்கு அதிக டிஆர்பி ரேட்டிங்க கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இன்றைய காலக்கட்த்தில் இல்லத்திரசிகளின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக இருப்பது டிவி சீரியல். இல்லத்தரசிகாகள் என்று சொல்வதை விட அவர்களின் கணவர்கள் இளைஞர்கள் என பலரும் இப்போது சீரியல் ரசிகர்களாக மாறிவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். இதனால் தான் முன்பு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் இப்போது 6 நாட்களாக ஒளிபரப்பாகி வருகிறது.
இதன் காரணமாக சீரியலுக்கு உண்டான வரவேற்கு அதிகரித்து வரும் அதே சமயம், டிஆர்பி ரேட்டிங்கில் யார் முதலிடம் பிடிப்பது என்று டிவி சீரியல்களுக்கு மத்தியில் பெரும் போட்டியே ஏற்பட்டுள்ளது என்று சொல்லலாம். இதன் காரணமாக தங்களது சீரியலில் விறுவிறுப்பை அதிகரிக்க பலரும் பலவித யுக்திகளை கையாண்டு வருகின்றனர். ஆனாலும் ஒரு சில சீரியல்கள் தான் இந்த டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது.
அந்த வகையில் இந்த வாரம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருக்கும் சீரியல் எதிர்நீச்சல். கோலங்கள் என்ற மெகாஹிட் சீரியலை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வரும் திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் சின்னத்திரை வரலாற்றில் அதிக டிஆர்பி ரேட்டிங் பெற்ற முதல் சீரியல் என்ற பெருமையை பெற்றுள்ளது.
தற்போது சமூகவலைதளங்களை எடுத்து பார்த்தால் எதிர்நீச்சல் குறித்து அதில் முக்கிய கேரக்ரானா ஆதி குணசேகரன் குறித்து மீம்ஸ்கள் அதிகமாக உலாவிக்கொண்டிருக்கின்றன் அன்றாட வாழ்க்கையில் இல்லத்தரசிகள் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளை அடிப்படையாக வைத்த திரைக்கதையும் அது தொடர்பான வசனங்களும் ரசிகர்கள் மத்தியில் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் எதிர்நீச்சலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதில் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு வில்லத்தனத்தில் மிரட்டி வரும் ஆதி குணசேகரன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள மாரிமுத்து பேசும் ஒவ்வொரு வசனமும் இணையத்தில் ட்ரெண்டிங் தான். கடந்த வாரம் இந்த சீரியலின் முக்கிய பகுதியாக ஆதிரையில் திருமணம் வலுக்கட்டாயமாக நடைபெற்றது. இதனால் சீரியலின் டிஆர்பி ரேட்டிங் 11.16 ஆக உயர்ந்து சின்னத்திரை வரலாற்றில் அதிக டிஆர்பி பெற்ற சீரியல் என்ற பெருமை பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.