சன்டிவியின் கல்யாண வீடு சீரியலில் நடித்து பிரபலமான நடிகை பிரியங்கா தற்போது வெள்ளித்திரையில் அறிமுகமாக உள்ளார். இந்தபடத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சன்டிவியில் ஒளிபரப்பான முக்கிய சீரியல்களில் ஒன்று கல்யாண வீடு. இயக்குனர் திருமுருகன் எழுதி இயக்கிய இந்த சீரியலின் பல புதுமுக நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த சீரியலில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்தவர் சிவன்யா பிரியங்கா.
கல்யாண வீடு சீரியலை தொடர்ந்து விஜய் டிவியின் பாவம் கணேசன் தொடரில் நடித்திருந்த சிவன்யா பிரியங்கா தற்போது வெள்ளித்திரையில் அறிமுகமாக உள்ளார். ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் மூலம் சிவன்யா அறிமுகமாக உள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸ்ரீகாந்துடனான புகைப்படத்தை வெளியிட்டுள்ள சிவன்யா பிரியங்கா, புதிய தொடக்கம் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் நடிகை பிரியங்காவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், நடிகை பிரியங்கா பெரிய திரையில் எப்போது வருவார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் அவருக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமூகவலைதளில் பிரபலமான நடிகை சிவன்யா பிரியங்கா, சீரியல் மட்டுமல்லாமல் பல்வேறு ஆல்பம் பாடல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“