Advertisment
Presenting Partner
Desktop GIF

மகளை சிறைக்கு அனுப்ப தயாராகும் அப்பா: மனைவி திரும்ப வருவரா? ஜீ தமிழ் சீரியலில் இன்று!

ஜீ தமிழின் கார்த்திகை தீபம் மற்றும் அண்ணா சீரியலின் இன்றைய எபிசோடு குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Karthigai Deepam ann.jpg

அருண் எடுத்த முடிவு.. கார்த்தியை பழி தீர்க்க துடிக்கும் ஐஸ்வர்யா - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் அருண் ஐஸ்வர்யா மீது இருக்கும் கோபத்தில் அவளது துணிமணிகளை கொளுத்திய நிலையில் இன்று, அருண் இனிமே ஐஸ்வர்யாவோட வாழ முடியாது. அவளுக்கு இனி இந்த வீட்டில் இடமும் இல்லை என்று ஆவேசப்படுகிறான். இவ்வளவு நாளா இந்த விஷ பூச்சியோட சேர்ந்து வாழ்ந்தேனு சொல்லும் போது எனக்கே அருவருப்பா இருக்கு என்று கோபப்படுகிறான்.

தர்மலிங்கம், ஜானகி என எல்லாரும் ஐஸ்வர்யா செய்ததை நினைத்து வருத்தப்பட்டு பேசுகின்றனர். அதனை தொடர்ந்து கார்த்திக் மற்றும் அருண் என இருவரும் வெளியே கிளம்ப அப்போது ராஜேஸ்வரி அவர்களை வழி மறிக்கிறாள். ஐஸ்வர்யா என்னதான் தப்பு பண்ணி இருந்தாலும் அவளை ஜெயிலுக்கு அனுப்பியது எல்லாம் சரியே இல்லை என்று சொல்ல அருணுக்கும் ராஜேஸ்வரிக்கும் வாக்குவாதம் உருவாகிறது. பிறகு ராஜேஸ்வரி ஐஸ்வர்யாவை சந்திக்க ஸ்டேஷனுக்கு வருகிறாள்.

ஐஸ்வர்யாவை சந்தித்து ஆறுதல் சொல்ல என்னை ஜெயிலுக்கு அனுப்பிய அந்த கார்த்திக்கை சும்மா விடகூடாது , பழி வாங்கியே ஆக வேண்டும் என்று ஆவேசப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பரணியிடம் உண்மையை மறைக்கும் சண்முகம்.. சௌந்தரபாண்டி சூழ்ச்சியில் சிக்க போவது யார்? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் வெங்கடேஷ் குடும்பத்தினரிடம் பரணி வாக்கு கொடுக்க அதை பார்த்து ரத்னா கோபமான நிலையில் இன்று, ரத்னா பரணி எப்படி உன்னை கேட்காமல் முடிவு எடுக்கலாம் கோப்பட சண்முகம் அவளை அதட்டி எவ்வளவு நாளைக்கு நீ இங்கேயே இருக்க முடியும் என்று சொல்ல ரத்னா அமைதியாகி விடுகிறாள்.  

அடுத்து சண்முகம் ரத்னாவை சும்மா அனுப்ப முடியாது என்று சொல்ல பரணி தன்னுடைய நகைகளை கொண்டு வந்து கொடுத்து இதுக்கு பாலிஷ் மட்டும் போட்டுட்டு வா என்று சொல்ல சண்முகம் இதெல்லாம் சௌந்தரபாண்டி சொத்து எனக்கு வேண்டாம் என்று சொல்கிறான். நானே சௌந்தரபாண்டி சொத்து தான் என்று பரணி சொல்ல சண்முகம் தாலி கட்டியதும் நீ எனக்கு சொந்தமாகிட்ட என்று சொல்லி நகையை வாங்காமல் கிளம்பி சென்று அதிக வட்டிக்கு பணம் வாங்கி நகையை ஏற்பாடு செய்கிறான்.

இந்த விஷயம் அறிந்த சௌந்தரபாண்டி மற்றும் பாண்டியம்மா கோவில் திருட்டு நகையை இந்த நகைகளுடன் கலந்து திருட்டு பழி போட்டு பரணியை ஜெயிலுக்கு அனுப்ப திட்டமிடுகின்றனர். வெட்டுக்கிளி பரணியிடம் சண்முகம் வட்டிக்கு பணம் வாங்கிய விஷயத்தை சொல்லி விட பரணி சண்முகத்திற்கு போன் செய்ய அவன் உண்மையை மறைத்து விடுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment