தங்கையை பாதுகாக்க அண்ணா எடுத்த முடிவு: மாமியாரிடம் அடி பணிவாரா மருமகன்? ஜீ தமிழ் சீரியலில் இன்று!

ஜீ தமிழின் அண்ணா மற்றும் கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

ஜீ தமிழின் அண்ணா மற்றும் கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Karthigai Deepam anna Serial

விலை பேசிய சிவணான்டி.. கார்த்திக் கொடுத்த பதிலடி என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் சந்திரகலா சிவனாண்டியை சந்திக்க இருவரும் கணவன் மனைவி என் தெரிய வந்துள்ள நிலையில் இன்று, சந்திரகலா கார்த்திக் ரொம்ப ஸ்ட்ராங்கான ஸ்டாங்கா இருக்கான்.. அவனை நம்ம கூட வச்சுக்கிட்டா சாமுண்டீஸ்வரி ஈஸியா வென்று விடலாம் என்று சொல்கிறாள்.

இதைத் தொடர்ந்து சிவனாண்டி கார்த்தியை சந்தித்து எங்க கூட சேர்ந்து வேலை செய்ய ரெடியா என்று கேட்க கார்த்திக் முடியாது என மறுத்து சிவனாண்டியை அவமானப்படுத்தி அனுப்பி வைக்கிறான். அடுத்து  ஸ்வேதா பாட்டுப்பாடி பிராக்டிஸ் செய்து கொண்டு இருக்க கார்த்திக் அதை பார்த்து சூப்பரா பாடுறீங்க என்று பாராட்ட ஸ்வேதா அம்மாவிடம் சொல்லி விடாதீங்க என பதற கார்த்தி நான் எங்க சொல்ல போறேன் என நகர்ந்து சென்று விடுகிறான்.

அதன் பிறகு  சிவணான்டி ஆட்கள் சாமுண்டீஸ்வரி குடும்பத்தை மடக்கி கத்தியால் குத்த வர சாமுண்டீஸ்வரி துப்பாக்கியை எடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisment
Advertisements

பஞ்சாயத்தை கூட்டிய சண்முகம்.. இசக்கி எடுக்க போகும் முடிவு என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் சண்முகம் இசக்கி வாழ்க்கையில் முக்கிய முடிவு எடுக்க திட்டமிட்ட நிலையில் இன்று, சௌந்தரபாண்டியன் வீட்டுக்கு வரும் பஞ்சாயத்தார் சண்முகம் உங்க மீது பிராது கொடுத்திருப்பதாக சொல்கின்றனர். சௌந்திரபாண்டி எதுக்கு பிராது என கேட்க அதை பஞ்சாயத்தில் வந்து தெரிந்துக்கோங்க என சொல்கிறார்கள்.

மறுபக்கம் சண்முகம் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்வது போல எல்லா ஏற்பாடுகளும் பரணிக்கு தெரியாமல் செய்கிறான். அடுத்து பஞ்சாயத்து கூடுகிறது. பஞ்சாயத்தில் சண்முகம் இசக்கி கொடுமைப்படுத்துவதாகவும் அதனால் தன் வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக சொல்கிறான். சௌந்தரபாண்டி தங்கச்சியை உன் வீட்டுக்கு அழைச்சிட்டு போனால் வாழா வெட்டியாயகி விடுவா பரவாயில்லையா என கேள்வி கேட்கிறார்.

பாக்கியம் முத்துப்பாண்டி இல்லாத நேரத்துல எதுவும் முடிவு எடுக்க வேண்டாம்.. இசக்கியை நான் பத்திரமா பாத்துக்கிறேன் என்று சொல்ல  எண்ணெய் ஊற்றி கொளுத்துற அளவுக்கு போயிருக்காங்க.. அதனால  இசக்கி இங்கு இருக்கிறது அவ்வளவு உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று சண்முகம் சொல்கிறான். நீங்க ரெண்டு பேரும் மாத்தி மாத்தி பேச வேண்டாம் இசக்கி அவளோட முடிவை சொல்லட்டும் என பஞ்சாயத்தார் செல்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? இசக்கி எடுக்க போகும் முடிவு என்ன? என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: