New Update
/indian-express-tamil/media/media_files/2024/11/13/AINJfjycyBUEj2RZvk6n.jpg)
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 3 சீரியல்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த நடிகர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி முன்னணி சேனல்களில் ஒன்றாக விளங்கி வருகிறது, இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் தொடர்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக ப்ரைம் டைம் நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம், சந்தியா ராகம், அண்ணா, வள்ளியின் வேலன் போன்ற சீரியல்கள் தொடர்ந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றன.
இந்நிலையில் 3 ஜீ தமிழ் சீரியல்களில் அடுத்தடுத்து 3 நடிகர்கள் மாற்றப்பட்டுள்ளனர். அதன்படி, வள்ளியின் வேலன் சீரியலில் வள்ளியின் அப்பாவாக சாக்ஷி சிவா ரத்தினவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். தறபோது சில தவிர்க்க முடியாத காரணங்களால் இவர் சீரியலில் இருந்து வெளியேறிய நிலையில் அவருக்கு பதிலாக பாம்பே ஸ்ரீதர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
அதே போல் சந்தியா ராகம் சீரியலில் கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த நவீன் சீரியலில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக புதிய கார்த்தியாக அஸ்வின் கண்ணன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கார்த்திகை தீபம் சீரியல் புதிய கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் புதிய நாயகியாக வைஷ்ணவி என்பவர் நடித்து வருகிரர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.