/indian-express-tamil/media/media_files/2024/10/18/GxnY7hcZmz1XdlaXoiRt.jpg)
தீபாவை கொல்ல நெருங்கும் துங்கா.. கார்த்திக் காப்பாற்றுவானா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று கார்த்திகை தீபம். கடந்த சில வாரங்களாக பரபரப்பின் உச்சமாக சென்றுகொண்டிருந்த இந்த சீரியல், தீபா தொலைந்து, கீதா என்ட்ரி ஆனதில் இருந்து கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அதே சமயம், கார்த்திக் – தீபா எப்போது இணைவார்கள் என்ற எதிர்பார்பும் அதிகரித்து வருகிறது. நேற்றைய எபிசோட்டில் தனது மகள் கிடைக்கும் வரை நாதஸ்வரம் வாசிப்பதாக தர்மலிங்கம் கூறியிருந்தார்.
அதன்பிறக சக்தி அவரிடம் உண்மையை சொல்ல, போக, அப்போது தூங்காவின் ஆட்கள் அவரை பார்த்துவிட, அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. தொடர்ந்து இன்றைய எபிசோட்டில், நர்ஸ் சக்தி வேறுவழியின்றி தீபாவுடன் துங்கா இருக்கும் இடத்திற்கு வருகிறாள். மறுபக்கம் அருண் மற்றும் கார்த்திக் என இருவரும் போலீஸ் ஸ்டேஷன் வருகின்றனர். அருண் ஐஸ்வர்யாவை சந்தித்து நீ காலம் முழுக்க உள்ள தான் இருக்கணும் என்று வெறுப்பேற்றுகிறான்.
இதையடுத்து கார்த்திக் வண்டியில் சிக்கி ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யபட்ட நபரை பார்ப்பதற்காக ஹாஸ்பிடலுக்கு கிளம்பி வருகிறான். இன்னொரு பக்கம் சக்தி தீபாவுடன் துங்கா இருக்கும் இடத்திற்கு வந்து சேர்கிறாள். உடனே துங்கா தீபாவை குத்தி கொல்ல போவதாக சொல்லி கத்தியுடன் அவளை நெருங்கி வர கட்டு போட்டு கிடக்கும் தர்மலிங்கம் தீபாவை காப்பாற்ற முயற்சி செய்கிறார். ஒரு கட்டத்தில் கட்டுக்களை அவிழ்த்து கொண்டு வந்து துங்காவை பிடித்து தீபாவை காப்பாற்றுகிறாள்.
இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதுவரை தீபா குடும்பத்தில் இருந்து யாரும் அவரை பார்த்துவிடாத நிலையில், தற்போது தீபாவின் அப்பா தர்மலிங்கமே, தனது மகளை பார்த்துவிட்டதால், விரைவில் கார்த்திக் – தீபா சேர்ந்துவிடுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதனால் கார்த்திகை தீபம் சீரியல் தற்போது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.